Tuesday, September 7, 2010

nithyananda in telugu film | நித்யானந்தா லீலை

நித்தியானந்தா-ரஞ்சிதா செக்ஸ் லீலை குறித்து தெலுங்கில் சினிமா ப் படம் எடுக்கவுள்ளனராம்.

நிஜக் கதைகளை சூட்டோடு சூடாக படமாக எடுத்து விடுவது இந்தியத் திரையுலகினரின் வழக்கம். அதுவும் செக்ஸ் சம்பந்தப்பட்ட சர்ச்சைகள் என்றால் சட்டுப் புட்டென்று படமாக்கி விடுவார்கள். அந்தவகையில் தற்போது நித்தியானந்தா-ரஞ்சிதா விவகாரத்தையும் படமாக்க கிளம்பியுள்ளனர்-தெலுங்கில்.

நித்தியானந்தாவுக்கு படுக்கை அறையில் பலவிதமான சேவைகளை நடிகை ரஞ்சிதா செய்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் சினிமா பாணியில் நான் அவன் இல்லை என்று கூறி விட்டார் நித்தியானந்தா. ரஞ்சிதாவும், நான் செய்தது சேவை, வீடியோவை மார்பிங் செய்து விட்டனர் என்று கூறி விட்டார்.

தற்போது இந்த வழக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. நடந்தது குற்றமா இல்லையா, சரியா, தவறா என்றும் யாருக்கும் புரியவில்லை. நித்தியானந்தாவும் வழக்கம் போல தனது பெங்களூர் மடத்தில் போதனை செய்ய ஆரம்பித்து விட்டார்.

இந்த நிலையில், நித்தியானந்தா கதையை படமாக்கவுள்ளனர் தெலுங்கில். நித்தியானந்தா வேடத்தில் ராஜேந்திர பிரசாத் நடிக்கப் போகிறாராம். இவர் தெலுங்கில் பிரபலமான காமெடி ஹீரோ ஆவார்.

சிவாஜி, சாய்குமார் ஆகியோரும் உள்ளனர். ஹைதராபாத்தில் சமீபத்தில் படத்திற்கு பூஜை போட்டனர். அப்போது நித்தியானந்தா கெட்டப்பில் வந்தாராம் ராஜேந்திர பிரசாத்.

கதை என்னவோ நித்தியானந்தா கதைதான் என்றாலும் அதை இப்போதைக்கு ரகசியமாகவே வைத்துள்ளனராம். கேஸ் ஏதாவது வந்தால் சிக்கலாகி விடுமே என்பதற்காக இந்த அடக்கி வாசிப்பாம்.

ரஞ்சிதா கேரக்டருக்குரிய நடிகையை வலைவீசி தேடும் பணி தற்போது நடந்து வருகிறதாம்.

Thursday, September 2, 2010

Trisha confess | போதையில் பேதை?

ஒரு பரபரப்பை இன்னொரு பரபரப்பால்தான் அடக்க வேண்டும் என யாரோ த்ரிஷாவிடம் சொல்லிவிட்டார்கள் போல.

போதை மருந்து விவகாரத்தில் த்ரிஷாவின் பெயர் ஏகத்துக்கும் ரிப்போராகிக் கொண்டிருக்க, அவரோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அடுத்தவர்களுக்கு அட்வைஸ், கருத்து என தொடர்ந்து பரபரப்பைக் கிளப்பி வருகிறார்.

ஏற்கெனவே அசின் இலங்கை போன விவகாரத்தில் கருத்து சொல்லியிருந்த த்ரிஷா, இப்போது மீண்டும் அதுபற்றிப் பேச ஆரம்பித்துள்ளார்.

"அசின் இலங்கைக்குப் போனதே தவறு. இங்கே உள்ள பிரச்சினைகள் தெரிந்தும் அவர் வேண்டுமென்றே போனது போலாகிவிட்டது. 

இப்போதும் சொல்கிறேன்... என்னை அழைத்திருந்தால் நிச்சயம் நான் போயிருக்க மாட்டேன்..." என்று கூறியுள்ளார்.

இன்னொரு பக்கம், கேட்டால் கூட கல்யாணம் பற்றி பதில் சொல்லாமல் தவிர்க்கும் த்ரிஷா, இப்போது தானாகவே முன்வந்து கல்யாண மேட்டரையும் பேசுகிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், "எல்லோரும் என் கல்யாணம் பற்றியே கேட்கிறார்கள் (இதுபற்றி அந்தப் பேட்டியில் கேள்வியே இல்லை!). நான் காதல் திருமணம்தான் செய்து கொள்வேன். நிச்சயம் முன் பின் தெரியாதவரை கல்யாணம் செய்து கொள்ளமாட்டேன்" என்று கூறியுள்ளார்.

இந்த போதை மருந்து விவகாரத்தில் பெயர் கெட்டாலும், த்ரிஷாவுக்கு ஒரு பெரிய லாபமாம்... பாலிவுட்டில் இப்போது அவரைப் பற்றித் தெரியாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறதாம்!
Related Posts Plugin for WordPress, Blogger...