Wednesday, June 30, 2010

நயன்தாரா, விஜய், பிரபு தேவா ????

இதுல்ல விஜய் காமெடி பீசோ?

கெளதம் நெக்ஸ்ட், இப்போ வெங்கட் பெஸ்ட்

கௌதம், அ‌‌‌ஜீத் இணையும் படம் டேக் ஆஃப் ஆகுமா என்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள். மாஸ் ஹீரோவின் படத்தில் இப்படி குழப்பம் ஏற்படும் போது அடுத்ததாக எழும் உடனடி கேள்வி, அடுத்த இயக்குனர் யார்?

இந்தமுறை இந்த கேள்விக்கு கிடைத்திருக்கும் பதில், வெங்கட்பிரபு.

அ‌‌‌ஜீத்தும் வெங்கட்பிரபுவும் நண்பர்கள். ச‌ரியாகச் சொன்னால் அ‌‌‌ஜீத் வெங்கட்பிரபுவின் நலம் விரும்பி. நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று அ‌‌‌ஜீத் வெங்கட்பிரபுவிடம் ஏற்கனவே கூறியிருக்கிறார். ஆனால் அதற்கான காலம் இப்போதுதான் கனிந்திருப்பதாக வெங்கட்பிரபு தரப்பு கூறுகிறது.

தயா‌ரிப்பாளர் சிவாவுக்காக பூச்சாண்டி என்ற படத்தை இயக்க இருக்கிறார் வெங்கட்பிரபு. காலம் தகைந்து வந்தால் பூச்சாண்டியை கிடப்பில் போட்டு அ‌‌‌ஜீத் படத்தை வெங்கட்பிரபு இயக்கலாம் என்கிறார்கள். அ‌‌‌ஜீத்துக்கான ஸ்கி‌ரிப்ட் வேலையில் வெங்கட்பிரபு தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் ஓ‌ரிரு நாளில் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை ரசிகர்கள் அறிந்து கொள்ளலாம்.

Thursday, June 24, 2010

இலங்கை தமிழர் பிரச்சனை ஒரு முடிவடைந்த விஷயம் - சூர்யா (சரவணன்) ?)

சென்னை: இலங்கையில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு எதிரான போராட்டம் செத்துப்போன விவகாரம். அதை மீண்டும் கிளறத் தேவையில்லை. இதன் அடிப்படையில், நானும் விவேக் ஓபராயும் நடித்துள்ள படத்துக்கு தடை விதிக்க முடியாது..", என்று கூறியுள்ளார் நடிகர் சூர்யா.

இன்று வியாழக்கிழமை 'பெங்களூர் மிர்ரர்' நாளிதழுக்கு சூர்யா அளித்துள்ள பேட்டி:

"தடையை மீறி கொழும்பில் நடந்த ஐஃபா விழாவில் பங்கேற்ற விவேக் ஓபராயுடன் நீங்கள் நடித்துள்ள ரத்த சரித்திரா படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதே?"

"ஐஃபா விழா விவகாரமே செத்துப் போன ஒன்று. அதை இனியும் இங்கே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அது ஒரு சின்ன விஷயம். அதைப் போய் இன்னும் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறீர்களே… என்னுடைய ரத்த சரித்திரா வெளியீட்டை அந்த விழா தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகள் ஒன்றும் செய்து விடாது. சமீபத்தில் ராவணன் ரிலீஸானபோதுகூட யாரும் ஒன்றும் சொல்லவில்லையே (ராவணனுக்கு எதற்காக தடை விதிக்க வேண்டும்?).

ரத்த சரித்திரம் படப்பிடிப்பின்போது நான் விவேக் ஓபராயோடு பேசினேன். அப்போது யுனிசெப் மற்றும் அந்நாட்டின் உள்ளூர் தமிழர்களுடன் இணைந்து புதிய பள்ளி ஒன்றை அமைத்திருப்பதாகச் சொன்னார். இந்த விஷயத்தில் அவர் என்ன உதவி கேட்டாலும் செய்ய நான் தயாராக உள்ளேன். அவருடன் சேர்ந்து அந்தப் பணியைச் செய்ய விரும்புகிறேன்.

நடிகர்கள் இலங்கை சென்றது வெறும் கேளிக்கைக்காக அல்ல. அங்குள்ள மக்களுக்கு உதவத்தான். இந்தப் பிரச்சினை அன்றோடு முடிந்துவிட்டது. திரும்பத் திரும்ப அதை கிளறுவது ஏன்?" என்று கேட்டுள்ளார் சூர்யா.

கொழும்பில் நடந்த சர்வதேச இந்திய திரை விழாவை தென்னகத் திரையுலகமே புறக்கணித்தது. வட இந்தியாவின் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஷாரூக்கான், அமீர்கான், ஐஸ்வர்யா ராய், ஜான் ஆபிரகாம், அக்ஷய் குமார் என முன்னணி நட்சத்திரங்கள் தமிழ் உணர்வாளர்களின் வேண்டுகோளை ஏற்று இலங்கை போகாமல் தவிர்த்தனர். இதையும் மீறி சில நடிகர்கள் போனார்கள். அவர்களின் படங்கள் இனி தென்னிந்தியாவின் 5 மாநிலங்களில் திரையிடப்பட மாட்டாது என்று தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்தது.

விழாவும் படுதோல்வியடைந்தது. இன்னொரு பக்கம் தடையை மீறி ஐஃபா விழாவுக்குப் போன விவேக் ஓபராய், சல்மான்கான், ஹ்ரித்திக் ரோஷன் படங்கள் தென்னகத்தில் வெளியாகத் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், சூர்யா நடித்து அடுத்து வெளியாக உள்ள ரத்த சரித்திரம் தமிழ், இந்திப் படங்களில் சூர்யாவுடன் விவேக் ஓபராய் இன்னொரு நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஐஃபா விழாவை எதிர்த்து மும்பையில் ஆர்ப்பாட்டங்களில் இறங்கி அமிதாப் போன்றவர்களை விழாவுக்குச் செல்லாமல் தடுத்த சீமானின் நாம் தமிழர் கட்சி, ரத்த சரித்திரம் ரிலீஸ் விஷயத்தில் மட்டும் அடக்கி வாசிக்கிறது.

'சூர்யா என் தம்பி. அவரது படத்தை மட்டும் மன்னிக்கலாம்' என்று பல்டியடித்துள்ளார் சீமான். ஆனால் உண்மையில் சூர்யாவும் அவரது தந்தை சிவகுமாரும் சீமானை சமாதானப்படுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது.

சீமானின் இந்த கொள்கை நழுவலுக்கு உணர்வாளர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இந்த நேரத்தில்தான், கடந்த 2 மாத காலமாக தென்னிந்திய திரையுலகமே நடத்தி வரும் ஐஃபா விழா எதிர்ப்பு போராட்டத்தை 'செத்துப்போன விவகாரம்' என சர்வ சாதாரணமாக கூறியுள்ளார் சூர்யா.

நடிகர்கள் இலங்கைக்குப் போனது நல்ல விஷயம் என்று இப்போது கூறும் இவர், இரு வாரங்களுக்கு முன் இந்த போராட்டம் உச்சத்திலிருந்த போது போராட்டத்தை ஆதரிப்பதாகக் கூறியது நினைவிருக்கலாம்.

Saturday, June 19, 2010

trisha 'no shy' in hindi

தமிழில் கட்டுக்கோப்பாக நடித்து வரும் திரிஷா , மும்பையில் தனது கவர்ச்சி யை கட்டவிழ்த்து சுதந்திரமாக நடமாட விட்டுள்ளார்.

நம்ம ஊர் நடிகைகள் எப்போதுமே இரண்டு விதமான பாலிசிகளை வைத்திருப்பார்கள். ஒன்று தமிழில் நடிக்கும்போது 'டியூப்லைட்' கவர்ச்சி, 2வது, தெலுங்குக்குப் போனால் 'டபுள் மடங்கு டிலைட்' என்பதே அந்த இரட்டைப் பாலிசி.

திரிஷாவும் இதில் விதி விலக்கல்ல. தமிழில் அவர் கவர்ச்சிகரமாக நடிக்க மாட்டார். லேட்டஸ்டாக நடித்த சில படங்களில் மட்டும் லேசான கவர்ச்சி காட்டியிருந்தார். ஆனால் தெலுங்கில் அவர் நிறையப் படங்களில் கவர்ச்சிகரமகாகவே நடித்துள்ளார். இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் விட்டாராம்.

இந்தி மீடியாக்களுக்காகவே பிரத்யேகமாக எடுக்கப்பட்ட தனது கவர்ச்சி ஸ்டில்களை அவர் உலா விட்டுள்ளாக கேள்வி. இது இந்தி ரசிகர்களுக்கு மட்டும்தான். இதை தென்னிந்தியாவுக்கு அனுப்பி விடக் கூடாது என்ற அன்புக் கட்டளையுடன் இந்த கூல் ஸ்டில்களை கொடுத்துள்ளாராம் திரிஷா.

இப்போது திரிஷாவின் கவர்ச்சிகரமான ஸ்டில்கள் இந்தி பத்திரிக்கைகளிலும், இணையதளங்களிலும் சக்கை போடு போட்டு வருகிறதாம். வருகிற 21ம் தேதி திரிஷா நடித்த கட்டா மிட்டா படம் ரிலீஸாகிறது. அதற்கு முன்பு ரசிகர்களிடம் தன்னைப் பற்றிய பாசிட்டிவான உணர்வுகள் ஏற்பட வேண்டும் என்பதற்காவே இந்த ஸ்டில்களை திரிஷா உலா விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்து ஹாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தால் எந்த ரேஞ்சுக்குப் போவார் திரிஷா என்று தெரியலையே...!

Thursday, June 17, 2010

(ajith focusing more on his 50th film) ஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்!

செப்டம்பர் வரை உலகில் நடக்கும் பெரும்பாலான எஃப் 2 கார் பந்தயங்களில் பங்கேற்பேன் என்று கூறிச் சென்ற அஜீத், முக்கிய பந்தயமான ஜெர்மன் போட்டிகளில் பங்கேற்காமல் சென்னையிலேயே தங்கியுள்ளார்.

இனி அடுத்து வரும் பந்தயங்களில் பங்கேற்பாரா அல்லது பட வேலைகளில் பிஸியாகிவிடுவாரா என்பது தெரியவில்லை.

அசல் படத்துக்குப் பிறகு தனது 50 வது படம் குறித்த அறிவிப்பை வெளியிடவிருந்த அஜீத், முதல்வர் விழா சர்ச்சைகளுக்குப் பிறகு, சினிமாவுக்கு சின்ன பிரேக் கொடுத்துவிட்டு தனக்கு விருப்பமான கார் ரேஸுக்கு கிளம்பிப் போய்விட்டார். இதற்கான மொத்த செலவையும் யார் தலையிலும் கட்டாமல் தானே பார்த்துக் கொண்டார்.

கிட்டத்தட்ட ரூ 10 கோடி வரை செலவழித்து மலேசியா, லண்டன், மொராக்கோ, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நடந்த முதல்நிலை பார்முலா 2 பந்தயங்களில் பங்கேற்றார். சில போட்டிகளில் கடைசி இடம் பிடித்தார், சில போட்டிகளில் சற்று முன்னணியில் வந்தார்.

இதற்கிடையே அவரது 50 வது படம் குறித்து பல்வேறு வதந்திகள் வரத் துவங்கின. இந்தப் படத்தை இயக்கும் கவுதம் மேனனுக்கும், தயாரிப்பாளர் தயாநிதி அழகிரிக்கும் அஜீத் மீது மனவருத்தம் இருப்பதாக கூறப்பட்டது.

மேலும் அஜீத்தின் நலம் விரும்பிகள், "உங்களுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாம் உங்களைத் தாண்டிச் செல்கிறார்கள். ஆனால் நீங்கள் பின்னோக்கிச் செல்வது போல உள்ளது. எனவே ரேஸெல்லாம் வேண்டாம்.. படத்தை அறிவியுங்கள்" என்று அறிவுறுத்தினார்கள்.

இப்போது, முக்கிய பந்தயமான ஜெர்மன் ரேஸில் பங்கேற்காமல் விட்டுள்ளார் அஜீத். அடுத்தடுத்த ரேஸ்கதளில் பங்கேற்பாரா என்பது தெரியவில்லை.

இதுகுறித்து அஜீத்தின் மீடியா தொடர்பாளர் வி கே சுந்தரிடம் விசாரித்தபோது, "அஜீத் சென்னையில்தான் உள்ளார். கவுதம் மேனன் - தயாநிதி அழகிரியும் இணைந்து 50 வது படம் செய்வது உறுதி. வேலைகள் நடக்கின்றன. படம் அக்டோபரில் துவங்கப்போகிறார்கள். அதற்கு முன்பே அறிவிப்பு வரும்...," என்றார்.

Wednesday, June 16, 2010

(surya brand ambassador )சரவணா ஸ்டோர்ஸ் பிராண்ட் அம்பாஸடர் சூர்யா என்கிற சரவணன்

தொழிலாளர்கள் பிரச்சினை, சிறார் வதை புகார், வாடிக்கையரைத் தாக்குதல் என பெரும் சர்ச்சைகளுக்குள் அவ்வப்போது சிக்கிக் கொள்ளும் பெரும் வணிக நிறுவனமான சரவணா ஸ்டேர்ஸின் பிராண்ட் அம்பாஸடராக நடிகர் சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார்.

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் புரசைவாக்கத்தில் பெரிய கிளை ஒன்றைத் திறந்துள்ளது. இந்த கடைக்குதான் பெரும் தொகைக்கு விளம்பர தூதராக ஒப்பந்தமாகியுள்ளார் சூர்யா.

அவருக்கு சம்பளமாக ரூ 3.5 கோடி வரை தரப்பட்டதாக நம்பகமான ஸோர்ஸ் தெரிவிக்கிறது (வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவருக்கு கமிஷனே 45 லட்சமாம்!).

இந்த வாய்ப்பு குறித்து சூர்யா கூறியிருப்பதாவது:

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தினர் அடிமட்டத்திலிருந்து பெரிய நிலைக்கு வந்தவர்கள், என்னைப் போலவே (?!). அவர்களது நிறுவனத்துக்கு நான் விளம்பரத் தூதராக இருப்பது பெருமைக்குரியது.

பிக் பஜார் போன்ற பெரிய பெரிய வட இந்திய நிறுவனங்களே, சரவணா ஸ்டோர்ஸின் வெற்றியைப் பார்த்து, அது பற்றி ஆராய்ந்து வருகிறார்கள்.

இந்த நிறுவனம் உயர் நடுத்தர வர்க்கத்தினரையும், உயர்தட்டு வர்க்கத்தினரையும் கவர்ந்திழுக்கும் நோக்கில் இந்த புதிய ஒப்பந்தத்தைச் செய்துள்ளனர். அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்.

எனக்கு அவர்கள் கொடுத்தது பெரிய சம்பளமல்ல. இன்றைக்கு என் மார்க்கெட் ரேட் என்னவோ அதைத்தான் கொடுத்துள்ளனர். இதற்கான விளம்பரப் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிந்துவிட்டது", என்றார்.

(ranjitha escapes to US) நித்யானந்தா புகழ் ரஞ்சிதா அமெரிக்க ஓட்டம ?

பெங்களூரு: கர்நாடக போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அமெரிக்காவுக்கு ஓட்டம் பிடித்துள்ளார் நடிகை ரஞ்சிதா.

சாமியார் என்று சொல்லிக் கொண்ட நித்யானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் செக்ஸில் ஈடுபட்ட வீடியோ வெளியான பிறகு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நித்யானந்தா மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து கர்நாடக போலீசார், அவரை இமாச்சல பிரதேசத்தில் கைது செய்தனர். 50 நாட்கள் நீதிமன்ற காவலுக்குப் பின் நேற்று முன்தினம் ஜாமீனில் விடுதலையாகி, மீண்டும் யாகம், பூஜை என பிஸியாகியுள்ளார் நித்யானந்தா.

நித்யானந்தா வழக்கில் ரஞ்சிதாவின் சாட்சியம் முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே அவரை போலீசார் வலைவீசி தேடினர். சென்னை தியாகராய நகர், சாலிகிராமத்தில் உள்ள ரஞ்சிதா வீடுகள் மூன்று மாதங்களாக பூட்டியே கிடக்கின்றன.

கேரளா, ஹைதராபாத் பகுதிகளிலும் ரஞ்சிதாவுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளிலும் போலீசார் தேடினர். அவர் எங்கும் கிடைக்கவில்லை. போலீசில் ஆஜராகும்படி அவரது வீடுகளில் சம்மன் ஒட்டப்பட்டது. ஆனால் அதை அவர் சட்டை செய்யவே இல்லை.

இதையடுத்து அவரை கைது செய்வதற்காக நீதிமன்ற ஆணை வாங்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். இத் தகவலைத் தெரிந்து கொண்ட ரஞ்சிதா, தானே விசாரணைக்கு பெங்களூர் வருவதாக இருமுறை கடிதம் அனுப்பினார். ஆனால் விசாரணைக்கு வரவே இல்லை.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள தந்தை வீட்டில் ரஞ்சிதா இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. நித்யானந்தாவை கைது செய்த சில தினங்களுக்குள் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்று விட்டாராம் ரஞ்சிதா. ஆனால் இந்தியாவில் இருப்பது போல போக்கு காட்டி வந்துள்ளார். இதில் ரஞ்சிதாவின் வழக்கறிஞரும் முக்கியப் பங்காற்றியுள்ளார். அவர்தான் ரஞ்சிதா எழுதியதாக கடிதங்களை போலீசாரிடம் அவ்வப்போது கொடுத்து வந்தார்.

ஆரம்பத்தில் வீடியோ காட்சிகள் போலியானவை என்று மறுத்து வந்தனர் நித்தியானந்தாவும் ரஞ்சிதாவும். ஆனால் தடய அறிவியல் சோதனைகளில் அந்த வீடியோ காட்சிகள் உண்மை என நிரூபிக்கப்பட்டுவிட்டதால், உண்மையை ஒப்புக் கொண்டு மவுனமாகிவிட்டனர்.

இப்போது தான் ஒரு சாமியார் அல்ல என்றும், தன்னை அப்படி எங்குமே சொல்லிக் கொண்டதில்லை என்றும் கூறி வருகிறார் நித்யானந்தா.

ஆனால் மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி வந்ததாக நித்யானந்தா மீது தொடரப்பட்ட வழக்கில், போலீசார் தன்னை கைது செய்யக் கூடும் என்று பயந்து ரஞ்சிதா அமெரிக்காவுக்கு ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர் எப்போது அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றார் என்பது புரியாமல் போலீசார் குழம்பியுள்ளனர். ரஞ்சிதா இந்தியாவுக்கு வரக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ள நித்யானந்தா ஆதரவாளர்கள் திட்டமிட்டு இந்த வேலையைச் செய்துள்ளனர்.

மணிரத்னத்தின் ராவணன் படத்தின் இறுதிக் காட்சிகள் கடந்த ஏப்ரல்- மே மாதங்களில் படமாக்கப்பட்ட போது, ரஞ்சிதா இங்குதான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கர்நாடக சி.ஐ.டி. போலீசாருக்கு ரஞ்சிதா எழுதியுள்ள இந்த புதிய கடிதத்தில், தனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு வர இயலாது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

ரஞ்சிதாவிடம் வாக்குமூலம் பெற்று நித்யானந்தாவுக்கு எதிரான வழக்கை உறுதிப்படுத்த போலீசார் போட்டிருந்த திட்டம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. நித்யானந்தா ஆதரவாளர்களும் ரஞ்சிதா போலீசில் சிக்காமல் இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள். வழக்கு முடியும் வரை அவர் தலைமறைவாகவே இருப்பார் என கூறப்படுகிறது.

ஆனாலும் ரஞ்சிதா வருகையை எதிர்பார்த்து விமான நிலையங்களில் ரகசிய போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Sunday, June 13, 2010

நடிகர் சங்கத்தில் பஞ்சாயத்து, விஜய் ஒப்புகொண்டார்

தனது திரை வாழ்க்கையில் முதல் முறையாக, தனது பட நஷ்ட ஈடு சம்பந்தமான ஒரு பஞ்சாயத்தில் நேரடியாகக் கலந்து கொண்டுள்ளார் வி்ஜய்.

பஞ்சாயத்து நடந்த இடம் நடிகர் சங்க வளாகம். செவ்வாய்க்கிழமை இரவு திடீரென இந்த பஞ்சாயத்து கூட்டப்பட்டது.

நடிகர் சங்க தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி ஏற்பாட்டில் திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் பன்னீர் செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார் விஜய். கூடவே அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரும், சுறா பட தயாரிப்பாளர் சங்கிலி முருகனும் இருந்தார்கள்.

சுற்றி வளைக்காமல் நேரடியாகவே விஷயத்துக்கு வந்த விஜய், 'நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்?' என்று நேரடியாகக் கேட்க, நஷ்ட ஈட்டின் அளவை பன்னீர் செல்வம் விளக்கினார்.

ஆனால் அவர் கேட்ட தொகையைக் கொடுப்பது சாத்தியமில்லை என்பதுபோல விஜய் பேச, விருட்டென்று எழுந்து போய்விட்டார்களாம் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர்.

நிலைமையின் தீவிரம் உணர்ந்ததால், மேலும் இறங்கிவந்த விஜய், மீண்டும் அவர்களை அழைத்து பேசினாராம். இனியும் இந்தப் பிரச்சினையை வளர விடுவது சரியல்ல என்று சரத்தும் ராதாரவியும் விஜய்யிடம் கூறினார்களாம்.

இப்போது இருதரப்பும் ஒரு புதிய முடிவை எட்டியிருப்பதாகக் கூறுகிறார்கள்.

இன்னும் ஓரிரு தினங்களில் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகக் கூடும் என்கிறது தியேட்டர்காரர்கள் தரப்பு.

பிரச்சினை தீர்ந்தால் சரி!

(robo(ரோபோ) music release in dubaI )துபையில் எந்திரன் இசை வெளியீடு

வரும் ஆகஸ்ட் மாதம் ரஜினியின் எந்திரன் பட இசை வெளியீட்டு விழா நடக்கும் என செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்த ஆனந்த விகடன் வார இதழ் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை:

'இந்த வருடம் ரிலீஸ் நிச்சயம்!' என்று ஷங்கர் தன் இணையதளத்தில் அறிவித்ததில் இருந்து... டிகிரி டிகிரியாக எகிறி வருகிறது 'எந்திரன்' ஃபீவர். 'என்னதான் நடக்கிறது உள்ளே?' என்று எட்டிப் பார்த்ததில் இருந்து...

ஹீரோ, வில்லன்... இரண்டும் ரஜினியே என்பதால் டப்பிங்கின் போது வசன உச்சரிப்பில் வித்தியாசம் வேண்டுமே, இதனால் இரண்டு விதங்களில் பேசிப் பயிற்சி எடுத்து, ஒலிப்பதிவின்போது இரண்டு குரல்களில் பேசி அசத்தி இருக்கிறார் ரஜினி. உதவிக்குத் தொழில்நுட்பமும் உண்டு!

'உப்புக் கருவாடு... ஊறவெச்ச சோறு...' என்று தியேட்டர்களைத் தடதடக்கவைத்த பாடல்போல ஃபாஸ்ட் பீட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் ரஹ்மான். டான்ஸ் மாஸ்டர் தினேஷின் நடன இயக்கத்தில் செம துள்ளலும் துடிப்புமாக ஆடி இருக்கிறாராம் ரஜினி!

'சிவாஜி' படத்தில் ரஜினிக்கு மேக்கப் போட்ட பானுதான் 'எந்திரன்' மேக்கப் வுமனும். தவிர, ஐஸ்வர்யா ராய்க்கு மட்டுமே 57 லுக்குகளில் மேக்கப்பாம். யப்பா!

சந்தானம், கருணாஸ் இருவரும் காமெடிக்கு இருக்கிறார்கள். கதைப்படி பேராசிரியர் ரஜினியின் மாணவர்கள் இருவரும். ரஜினி உருவாக்கும் ரோபோ ரஜினி, ஆரம்பத்தில் நல்ல குணங்களுடன் இருக்கும். காதல், கல்யாணப் பிக்கல் பிடுங்கல்கள் இருக்காது என்பதால், ரோபோ ரஜினிக்கு கல்லூரிப் பெண்கள் மத்தியில் செம டிமாண்ட். அலேக்காக அழகிகளை மடக்கும் ரோபோ ரஜினியைக் கவிழ்க்க, 'காய்ந்துகிடக்கும்' சந்தானம், கருணாஸ் மேற்கொள்ளும் முயற்சிகள்தான் காமெடிக் கதகளி. 'நாங்க செய்ற எல்லாத்தையும் உன்னால செய்ய முடியாது!' என்று ரோபோ ரஜினிக்கு இருவரும் சவால்விட்டு உதார்விடுவது உச்சக்கட்ட காமெடிக் குருமா!

'எந்திரன்' க்ளைமாக்ஸ் காட்சி பிரமாண்டத்தின் உச்சமாக இருக்குமாம். எண்ணூரில் அமைந்துள்ள புதிய துறைமுகத்தை நோக்கி பிரமாண்டக் கப்பல் ஒன்று வரும். கப்பல் முழுக்க அடுக்கப்பட்டுஇருக்கும் கன்டெய்னர்களில் வெடி மருந்துகள். கப்பலைச் செலுத்துவது வில்லனான ரோபோ ரஜினி. கப்பல், துறைமுகத்தில் மோதி வெடித்தால், ஒட்டுமொத்த சென்னையும் பஸ்பம் ஆகிவிடும். சென்னையை அழிக்கும் நோக்கத்தோடு வரும் ரோபோ ரஜினி யைத் தடுக்க, நடுக்கடலில் அதோடு மோதுவார் பேராசிரியர் ரஜினி. வெடிமருந்தை நடுக்கடலிலேயே பற்றவைத்து சென்னையைக் காப்பாற்றுவதுதான் க்ளைமாக்ஸ்!

படத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல... எக்கச்சக்க வில்லன் ரோபா ரஜினிக்கள் உண்டு. ரோபோ ஃபார்முலா அறிந்துகொண்டு ஏகப்பட்ட ரோபோ ரஜினிக்களை உருவாக்குவார் வில்லன் டேனி டெங்ஸோங்பா. அது தயாராகும் தொழிற்சாலைக்கே சென்று அவற்றை அடித்துத் துவம்சம் செய்ய வேண்டிய கடமை நல்ல ரஜினிக்கு. ஹாலிவுட் படம் 'ஐ ரோபாட்' போல முழுக்க முழுக்க அனிமேஷன் எலெக்ட்ரானிக்ஸில் எக்கச்சக்க ரஜினிகள் திரையில் சாகசம் செய்வார்கள்!

அழகு மட்டுமல்ல; ஐஸ்வர்யா இதில் அதிரடியும் காட்டுகிறார். கதைப்படி பேராசிரியர் ரஜினிக்கு கராத்தே தெரியும். ரோபோ ரஜினியிடம் இருந்து தப்பிக்க ஐஸ்வர்யாவுக்கு கராத்தே கற்றுத் தருவார் அவர். இதற்காக ரஜினி, ஐஸ்வர்யா இருவருமே 10 நாட்கள் காராத்தேவின் அடிப்படை வித்தைகளைக் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்!

'அரசியலில் என்றைக்குமே நான் நிராயுதபாணி', 'வாழ்க்கை கொடுப்பவன் வாக்காளன்... வாய்க்கரிசி போடுறவன் வேட்பாளன்', 'அர்த்த சாஸ்திரம் உங்க வழி.. தர்ம சாஸ்திரம் என் வழி' இவையெல்லாம் படத்தில் ஆங்காங்கே ரஜினி அடிக்கும் பஞ்ச் டயலாக்குகள்!

ஜூலை 10 அல்லது ஆகஸ்ட் 10... 'எந்திரன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தத் திட்டம். ஸ்பாட்.... அநேகமாக, துபாய்!

ரஜினியின் ஆராய்ச்சிக்கூட செட்டின் மதிப்பு ஐந்து கோடி ரூபாய். அலுமினிய ஷீட்டுகளால் கிழக்கு கடற் கரைச் சாலையில் பிரமாண்டமாக இந்த செட்டை இழைத்திருக்கிறார் கலை இயக்குநர் சாபு சிரில்!

முதல்வருக்கு பெப்ஸி நடத்திய விழாவுக்கு சென்னை வந்த அமிதாப், 'எந்திரன்' ஷூட்டிங் ஸ்பாட்டில் எட்டிப்பார்த்து இருக்கிறார். அப்படியே அவரை ஒரு காட்சியில் நடிக்கவைத்துவிட்டார் ஷங்கர்!

'எந்திரன்' டப்பிங் முழுவதும் முடிந்த பின் திருப்பதி சென்று ஏழுமலையானுக்கு விசேஷப் பூஜை செய்யும் திட்டத்தில் இருக்கிறார் ரஜினி!

Wednesday, June 9, 2010

Sandra Bullock relished Scarlett Johansson’s kiss!

ஹாலிவுட்டில் அட்டகாசமான உதடுகளைக் கொண்ட நடிகைகளில் ஒருவராக சான்ட்ரா புல்லக் வர்ணிக்கப்படுகிறார்.


அதேபோல இன்னொரு சூப்பர் உதடு நடிகையாக கருதப்படுபவர் ஸ்கார்லெட் ஜோஹன்சன்.

இந்த இருவரும் 'ஃபயர்' முத்தம் சம்பவம் எம்டிவி மூவி அவார்ட் நிகழ்ச்சியில் நடைபெற்றுள்ளது.

45 வயதாகும் புல்லக், அவருக்கு வழங்கப்பட்ட ஜெனரேஷன் விருதினை பெறறுக் கொண்டு திரும்பினார். அப்போது அங்கு ஸ்கார்லெட் நின்றிருப்பதைப் பார்த்து அவரிடம் சென்று பேசினார். பின்னர், சான்ட்ராவும், ஸ்கார்லெட்டும் உதடுகளைப் பொருத்தி முத்தமிட்டுக் கொண்டனர். இதைப் பார்த்த அனைவரும் ஓவென குரல் எழுப்பி ஆர்ப்பரித்தனர்.

ஸ்கார்லெட்டை முத்தமிட்ட பின்னர் இப்போது உங்களுக்குத் திருப்தியா என்று அனைவரையும் பார்த்து புன்னகையுடன் கேட்டார் சான்ட்ரா.

புல்லக் ஒரு நடிகைக்கு முத்தமிடுவது இது முதல் முறையல்ல. முன்பு மெரில் ஸ்டிரீப் என்ற நடிகைக்கும் பொது இடத்தில் முத்தமிட்டுள்ளார்.

மன்மதன் அம்பு விட கிளம்பிட்டார்

கமல், திரிஷா ஜோடியாக நடிக்கும் படம் மன்மதன் அம்பு. கே.எஸ். ரவிக்குமார் இயக்குகிறார். உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். மாதவன், சங்கீதா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் 95 சதவீத படப்பிடிப்பு ரோம், வெனிஸ், பாரீஸ், பார்சிலோனா உள்ளிட்ட வெளிநாடுகளில் நடக்கிறது. ஒன்றரை மாதங்கள் அங்கு படப்பிடிப்பு நடைபெறும் என்று கே.எஸ். ரவிக்குமார் கூறினார். வெளிநாட்டில் பிரமாண்ட கப்பலொன்றிலும் சில காட்சிகள் படமாக்கப்படுகின்றன. கப்பலை வாடகைக்கு வாங்கி இருக்கிறார்கள்.

கேளம்பிடங்கயா கேளம்பிடங்கயா ..

படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக கமல் ஜூன் 8ஆம் தேதி வெளிநாடு புறப்பட்டுச் சென்றார். திரிஷாவும் செல்கிறார். கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட படத்தின் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் நடிகர், நடிகைகள் நாளை வெளிநாடு புறப்படுகின்றனர்.

காதல், காமெடி கதையாக இப்படத்தை எடுக்கின்றனர். இதில் கமல் 30 வயது வாலிபன் போன்ற தோற்றத்தில் வருவார் என்று கே.எஸ். ரவிக்குமார் கூறினார். இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார்.

vivek flops again

சமீபத்தில் விவேக் ஹீரோவாக நடித்து ஒரு படம் வெளியானது நினைவிருக்கலாம். இந்தப் படம் ஒரு வாரம் கூட தாக்குப்பிடிக்கவில்லை என்பது வேறுவிஷயம். ஆனால் இந்த ஒரு வாரத்துக்குள் எத்தனை தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன என்பதுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடபழனியில் உள்ள ஒரு திரையரங்கில் இந்தப் படம் நான்கு காட்சிகளாகத் திரையிடப்பட்டது. படம் வெளியான நான்காவது நாள், தியேட்டரில் மேட்னி ஷோவுக்கு கூடியது வெறும் மூன்றுபேர்தானாம். ஒரு ஷோவை ஓட்ட குறைந்தபட்சம் 7 பேராவது இருக்க வேண்டுமாம். மூணே பேரு, தியேட்டருக்குள்ள உட்கார்ந்தா பயமா வேறு இருக்காதா..!

அதனால் தியேட்டர் நிர்வாகமே பார்த்து அந்த ஷோவைக் கேன்சல் செய்துவிட்டது. விஷயம் கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்துபோனாராம் நடிகர்.

அடுத்தடுத்த ஷோக்களுக்கும், ஆபரேட்டரே 'லோன்லியாக ஃபீல்' பண்ணுமளவுக்குதான் ரசிகர்கள் வந்தார்களாம்.

'இதுக்குமேல தாங்காதுய்யா... இந்தா உன் படம்' என தயாரிப்பாளரிடம் பிரிண்டைத் தூக்கிப் போட்டுவிட்டு, பெண்சிங்கத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

இப்போ ரிசல்ட் ஓஹோவா என்கிறீர்களா... மூணு நாலு என்று வந்த ரசிகர்கள் எண்ணிக்கை பத்து பதினைந்து என உயர்ந்திருக்கிறதாம்.

'இதையும் சீக்கிரம் ஐடி பார்க்கா மாத்திடணும்' என தியேட்டர் முதலாளி மகனிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம்!

Tuesday, June 8, 2010

[sasirekha murder]சசிரேகா தூக்கில்,ஷான் தலைமறைவு.

சென்னை: தமிழ் திரைப்பட நடன இயக்குநர் ஷான் என்பவருடன் ஒரு கிளப்பில் தங்கியிருந்த தெலுங்கு டிவி நடிகை மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். ஷான் தலைமறைவாகிவிட்டார்.

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவக் சசிரேகா (20). டிவி நடிகையான இவர் தெலுங்கில் சில டி.வி. தொடர்களில் நடித்து வந்தார்.

இந் நிலையில் தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேட, சென்னை வளசரவாக்கம் காமாட்சி நகரில் தனது தாய், தந்தையுடன் குடியேறினார்.

சசிரேகாவின் தந்தை சீனிவாச ராவ் மிளகாய் மண்டியில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக உள்ளார்.

சசிரேகாவுக்கு மடிப்பாக்கம் அருகே உள்ள கீழ்க்கட்டளையைச் சேர்ந்த ஷான் (26) என்பவர் சினிமாவில் நடிக்க நடனம் கற்றுக் கொடுத்தார். அப்போது அவர்களிடையே பழக்கம் ஏற்பட்டது.

இந் நிலையில் கடந்த 6ம் தேதி சசிரேகாவும், ஷானும் சென்னை ஈஞ்சம்பாக்கம் அரிச்சந்திரா நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் தங்குவதற்காக வந்தனர்.

இந்த பண்ணை வீட்டில் தங்க வேண்டுமானால் அதில் உறுப்பினராக இருக்க வேண்டும். இதனால் அதில் ஏற்கனவே உறுப்பினராக உள்ள அருள்ராஜ் என்பவரது உதவியால் இருவரும் தங்கினர்.

அந்த அறைக்கு ஒரு நாளைக்கு ரூ. 1,500 வாடகை.

நேற்று மாலை 4.30 மணியளவில் ஷான் வெளியே சென்றார். போகும் போது பண்ணை வீடு ஊழியர் மணியிடம், சசிரேகாவுக்கு ஷூட்டிங் இருப்பதால் தற்போது தூங்கி ஓய்வு எடுப்பதாகவும் இப்போதைக்கு எழுப்ப வேண்டாம் என்றும் கூறிவிட்டுச் சென்றுள்ளா.

ஆனால், இரவு வரை ஷான் திரும்பவில்லை. சசிரேகாவும் கதவைத் திறக்கவில்லை. இந் நிலையில் ஊழியர் மணி சாப்பாடு எடுத்துக் கொண்டு சசிரேகாவின் அறைக்குச் சென்றார். அந்த அறை கதவு உள்புறம் தாழிடப்பட்டிருந்தது.

இதையடுத்து அறையின் பின்புற ஜன்னல் வழியாக சென்று அறைக்குள் எட்டிப்பார்த்தார். அப்போது சசிரேகா மின் விசிறியில், தனது துப்பட்டாவில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

இதையடுத்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. துரைப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அறையில் பீர் பாட்டில்கள் கிடந்தன. இதையடுத்து ஷானை போலீசார் தேடியபோது அவர் தலைமறைவாகிவிட்டார். இதனால் சசிரேகாவின் மரணத்தில் மர்மம் நிலவுகிறது.

சசிரேகாவுக்கு தமிழ்ப் படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி அவ்வப்போது அவருடன் தனிமையில் தங்கியிருந்து வநதுள்ளார் ஷான் என்று தெரிகிறது.

சசிரேகாவை ஷன் கொலை செய்தாரா அல்லது சசிரேகாவை தூக்கில் தொங்கினாரா என்று தெரியவில்லை. விசாரணை நடக்கிறது. ஜானை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Monday, June 7, 2010

(robin-hood )ராபின்ஹூட் விஜய். ஜெனிலியா கதி?

ஜெயம் ராஜா இயக்க, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் இந்தப் படம், நாகார்ஜூனா - சௌந்தர்யா நடித்த 'ஆஸாத்' என்ற பழைய தெலுங்குப் படத்தின் ரீமேக்.

ஆக்ஷன், காதல் கலந்த இந்தப் படத்தில், இருப்பவர்களிடம் பிடுங்கி இல்லாதவர்களுக்குத் தரும் நவீன ராபின்ஹூட்டாக நடிக்கிறாராம் விஜய்.


இந்தப் படத்துக்கான ஃபோட்டோ ஷூட் நேற்று சாலிகிராமத்தில் உள்ள ஸ்டுடியோவில் நடந்தது. படத்தின் நாயகி ஹன்ஸிகா மோத்வானி இதில் பங்கேற்றார்.

இந்தப் படத்தின் இன்னொரு நாயகியாக ஜெனிலியா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் தடையை மீறி இலங்கைக்கு காதலருடன் சென்றவர், விஷயம் வில்லங்கமாவதை உணர்ந்து, அடுத்த பிளைட்டிலேயே மும்பைக்கு ஓடினார். அங்கிருந்து சென்னையில் உள்ள நிருபர்களுக்கும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கும் போன் செய்து, நான் போகவில்லை என்று கற்பூரம் அடிக்காத குறையாக பொய் சத்தியம் அடித்துள்ளார்.

ஆனால் இவர் கொழும்பிலிருந்தது உண்மைதான் என்பதைத் தெரிந்து கொண்ட தயாரிப்பாளர்கள் கடுமையாகத் திட்ட, விஷயம் தற்போது நடிகர் சங்கத்திடம் போயுள்ளது.

ஜெனிலியா மீது அடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

Sunday, June 6, 2010

பிரபுதேவா – நயன்தாராவின் கள்ளக் காதலுக்கு அங்கீகாரம்!

சென்னை: நடிகை நயன்தாராவும் பிரபுதேவாவும் நேற்று வீட்டில் மாலை மாற்றிக் கொண்டனர். அவர்களுக்கு பிரபுதேவாவின் பெற்றோர் அட்சதை தூவி ஆசீர்வதித்தார்கள். இதன் மூலம், ஏற்கெனவே திருமணமாகி மனைவி, இரு குழந்தைகளுடன் உள்ள பிரபு தேவா, நயன்தாராவுடன் கொண்டிருந்த கள்ள உறவுக்கு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
நயன்தாரா மனைவியா, துணைவியா என்று அறிவிக்காதது ஒன்றுதான் பாக்கி.
‘வில்லு’ படத்தை பிரபு தேவா இயக்கியபோது காதல் அம்பு விட்டு நயன்தாராவை கரெக்ட் செய்தார். அம்பு இதயத்தில் ஆழமாகத் தைத்துவிட்டதால், அதன்பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார் நயன்தாரா. பிரபு தேவா – நயன்தாரா உறவு ‘கள்ளக் காதலாக’ மாறியது. இருவரும் கணவன்-மனைவியாக ஒரே அறையில் தங்குகிறார்கள். ஜோடியாக வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார்கள். ஊருக்கே தெரிந்த தங்களின் உறவைப் பற்றி யார் கேட்டாலும் ஒன்றுமே தெரியாதவர்களைப் போல பம்மி வந்தார்கள்.
நயன்தாரா, திருமணம் ஆகாதவர். பிரபுதேவாவுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நயன்தாரா-பிரபுதேவா காதலுக்கு பிரபுதேவாவின் மனைவி ரமலத் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். என் கணவருடன் உள்ள உறவை துண்டித்துக் கொள்ளாவிட்டால், நயன்தாராவை பார்க்கிற இடத்தில் அடிப்பேன் என்று ரமலத் எச்சரிக்கை விடுத்தார்.
பின்னர் திரையுலகப் புள்ளிகளை வைத்து பஞ்சாயத்து கூட்டினார். அதில் நயன்தாராவை உயிருக்கு உயிராகக் காதலிப்பதாகக் கூறி, தன்னைப் பிரிந்தால் அவர் தற்கொலை செய்து கொள்வார் என்றார் பிரபுதேவா. அதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என்று பஞ்சாயத்து தரப்பு கழன்று கொண்டது.
இன்னொரு பக்கம் இவர்களின் காதலுக்கு, பிரபுதேவாவின் தந்தை டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், தாயார் மகாதேவம்மா ஆகிய இருவரும் ஆதரவாக இருக்கிறார்கள்.
இவர்களின் வீடு, சென்னை ஆழ்வார்பேட்டையில், நாரதகான சபாவுக்கு எதிரில் உள்ளது. அந்த வீட்டில் டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், அவருடைய மனைவி மகாதேவம்மா, கடைசி மகன் நாகேந்திரபாபு ஆகியோர் வசித்து வருகிறார்கள்.
அந்த வீட்டில், நேற்று ஒரு விசேஷ பூஜை நடந்தது. 4 புரோகிதர்கள் சேர்ந்து யாகம் வளர்த்து, பூஜை நடத்தினார்கள். காலை 10-30 மணிக்கு தொடங்கிய பூஜை, பிற்பகல் 2 மணிவரை நடைபெற்றது.
அதில் நயன்தாராவும், பிரபு தேவாவும் கலந்துகொண்டார்கள். இருவரும் மணமக்களைப்போல் கழுத்தில் மாலை அணிந்திருந்தார்கள். புரொகிதர்கள் மந்திரம் சொன்னதும், இருவரும் மாலை மாற்றிக் கொண்டார்கள். அப்போது இரண்டு பேர் தலையிலும் புரோகிதர்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டார்கள்.
அறிவிக்காத திருமணம்
இது கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத திருமணம் மாதிரி கருதப்படுகிறது.
ஆனால் திருமணம் என்று அறிவித்தால் பிரபுதேவாவும் நயன்தாராவும் கம்பி எண்ண வேண்டிவரும். உயிரோடு இருக்கும் முதல் மனைவி ஒருவேளை நீதிமன்றத்துக்குப் போனாலும், ‘இது சும்மா சடங்கு, பூஜை’ எனக் கூறி சமாளித்துக் கொள்ளலாம்; சமூகத்தின் பார்வையில் கல்யாணம் பண்ண மாதிரியும் இருக்கும் என்ற மெகா திட்டத்துடன் நடத்தப்பட்ட நிகழ்வு இது.
பொதுவாக இதே போன்ற சட்டவிரோத கள்ளத் தொடர்புகளில் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் சிக்கும்போது, சரேலென பாயும் இருதார மண தடைச் சட்டம், கள்ளத் தொடர்புக்கான விபச்சாரத் தடைச் சட்டம் இப்போது மட்டும் மௌனித்து நிற்கிறது.
இந்த விஷயத்தில் பணக்காரர்கள், பிரபலங்களின் இஷ்டத்துக்கேற்ப வளைந்து நிற்கும் சட்டமும் அதன் காவலர்களும், சாதாரண வர்க்கத்தினரையும் இதேபோல கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாமே… சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வெட்டிப் பேச்சு எதற்கு!

ஜெனிலியா வுக்கு அடிச்ச ஆப்பு

சென்னை: தடையை மீறி இலங்கை பட விழாவில் பங்கேற்ற நடிகை ஜெனிலியாவை விஜய் படத்திலிருந்து நீக்கியுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். விழாவுக்குப் போகவில்லை என்று அவர் பொய் சொல்வதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அவருக்கு எந்த ஒத்துழைப்பும் தரப்படாது என்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி கூறியுள்ளார்.

தமிழர்களை படுகொலை செய்த இலங்கையில், சர்வதேச இந்திய பட திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்த பட விழாவுக்கு நடிகர்-நடிகைகள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் செல்லக்கூடாது என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் கலந்துகொண்ட கூட்டு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டு கூட்டத்தின் வேண்டுகோளை மீறி கலந்துகொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதனை ஏற்று கொழும்பு நகரில் நேற்று முன்தினம் தொடங்கிய இலங்கை சர்வதேச இந்திய திரைப்பட விழாவை பல நடிகர்கள் புறக்கணித்து விட்டார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், சாருக்கான், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் உள்பட பலர் அந்த பட விழாவுக்கு போகவில்லை.

தமிழ் நடிகர்-நடிகைகள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்ததால், இலங்கை பட விழா படுதோல்வியடைந்துள்ளது. இலங்கை பத்திரிகைகள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் அரசை கடுமையாக சாட ஆரம்பித்துள்ளனர்.

அதேநேரம் தடையை மீறி சல்மான்கான், ஹிரித்திக் ரோஷன், விவேக் ஓபராய், சஞ்சய்தத் உள்ளிட்ட சில இந்தி நடிகர்கள் இலங்கை பட விழாவில் கலந்து கொண்டார்கள். நடிகை ஜெனிலியா, காதலர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் விழாவில் பங்கேற்றார். இதுபற்றி சிங்கள மீடியாவிலும் புகைப்படத்துடன் செய்தி வெளியானது.

எனவே இலங்கை சென்ற நடிகர் நடிகைகளின் படங்களுக்கு தென்னிந்திய திரையுலகம் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று நேற்று அறிவித்தது. இலங்கை பட விழாவில் கலந்துகொண்ட நடிகர்-நடிகைகளின் படங்களை திரையிடுவதில்லை என்று திரையரங்க உரிமையாளர்களும் அறிவித்துள்ளனர்.

ஜெனிலியா கோவாவைச் சேர்ந்தவர் என்றாலும், அவர் அறிமுகமாகி புகழ்பெற்றதே தமிழ்ப் படங்களின் மூலம்தான். இப்போதும் உத்தமபுத்திரன் படத்தில் தனுஷுடன் நடிக்கிறார்.

தடையை மீறி இலங்கை பட விழாவில் கலந்துகொண்டதால், ஜெனிலியா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி அறிவித்து இருக்கிறார்.

இதேபோல் ஜெனிலியாவுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதனும் கூறியிருக்கிறார்.

விஜய் படத்தில் இருந்து நீக்கம்:

விஜய் கதாநாயகனாக நடிக்க, ஜெயம் ராஜா டைரக்ஷனில் ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரிக்கும் 'வேலாயுதம்' என்ற புதிய படத்தில், ஜெனிலியா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.

தடையை மீறி ஜெனிலியா இலங்கை படவிழாவில் கலந்துகொண்டதால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், தொழிலாளர்கள் சம்மேளனம் எடுத்துள்ள முடிவுக்குக் கட்டுப்பட்டு ஜெனிலியாவை நீக்கியுள்ளதாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

தனுஷ் ஜோடியாக ஜெனிலியா நடித்துக்கொண்டிருக்கும் 'உத்தம புத்திரன்' படம் முடிவடையும் நிலையில் உள்ளது. அந்த படத்தின் இயக்குநர் மித்ரன் ஜவகரிடம் கேட்டபோது, "ஜெனிலியா மீது தமிழ் பட உலகம் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்" என்றார்.

ஜெனிலியா சொல்வது உண்மையா?:

இதற்கிடையில், "இலங்கை பட விழாவில் நான் கலந்து கொள்ளவில்லை'' என்று ஜெனிலியா மறுத்திருக்கிறார்.

ஆனால் அவரது மறுப்பில் உண்மையில்லை என்றும், காதலர் ரிதேஷுடன் விழாவுக்கு முதலில் போனவர் ஜெனிலியா. விஷயம் தெரிந்து தமிழ் சினிமாவில் பரபரப்பான முடிவுகள் எடுக்கப்படுவது தெரிந்ததும் அங்கிருந்து ஓடிவந்து விட்டார். அவரது பாஸ்போர்ட்டை சோதித்தால் விஷயம் தெரிந்துவிடும், என்றும் நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

Friday, June 4, 2010

ஐய்யய்யோ.. ஐ.ஐ.எப்.எ நான் போகலை! - அலறும் ஜெனிலியா

நான் ஐஃபா விழாவுக்குப் போனதாக வந்த தகவல் தவறானது. நான் தமிழரையும் தமிழ் உணர்வுகளையும் மதிக்கிறேன். நான் ஒருபோதும் இலங்கை நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன்", என்றார் நடிகை ஜெனிலியா.

இலங்கை தலைநகர் கொழும்பில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடக்கிறது. இதில் தமிழ் சினிமாவின், இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள் யாரும் போகவில்லை. தமிழரின் ரத்தக் கறை படிந்த இலங்கையில், அந்த படுகொலைகளை மறைக்க ராஜபக்சே செய்யும் திருகுதாள வேலை இது என்று தமிழ் உணர்வாளர்கள் எடுத்துச் சொன்னதைக் கேட்டு இவர்கள் அனைவரும் விழாவைப் புறக்கணித்தனர், யாரும் சொல்லும் முன்பே ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் தங்கள் புறக்கணிப்பை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் நேற்று கொழும்பில் தொடங்கிய ஐஃபா விழாவுக்கு சில இரண்டாம் நிலை பாலிவுட் நடிகர்கள் பங்கேற்றனர். இவர்களுடன் நடிகை ஜெனிலியாவும் கலந்து கொண்டதாக சிங்கள பத்திரிகைகள் மற்றும் இணையதளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த செய்தி தமிழ் ஊடகங்களிலும் வெளியானது. இதனால் அவருக்கு தென்னகத்தில் ரெட் கார்டு போடும் நிலை ஏற்பட்டது.

இதைக் கேள்விப்பட்டு ஆடிப்போனார் ஜெனிலியா. "ஐயோ...நான் ஐஃபா விழாவுக்குப் போகவில்லை. உண்மையில் நான் சாயிஃப் அலிகான் மற்றும் ஷாரூக்கானுடன் மேடையில் நடனம் ஆடுவதாக இருந்தது. மனீஷ் மல்ஹோத்ராவுடன் ரேம்ப் வாக் பண்ணவும் ஒப்புக் கொண்டிருந்தேன். ஆனால் தமிழர் போராட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களைப் பார்த்த பிறகு நான் வி்லகிக் கொண்டேன்.

நான் தமிழில் அறிமுகமானவள். தமிழ் சினிமாவை நேசிக்கிறேன். இன்னும் நிறைய படங்கள் பண்ண வேண்டும் ஆசை உள்ளது. இன்னும் இரு தினங்களில் சென்னை வருகிறேன். தனுஷுடன் உத்தம புத்திரன் படத்தில் நடிக்கிறேன்.." என்றார்.

Thursday, June 3, 2010

எதிர்ப்பை மீறி கொலம்போ செல்லும் ஜெனிலியா மற்றும் பிபாஷா, தமிழ் திரை உலகம் மன்னிக்குமா?

கொழும்பில் நடக்கும் ஐஃபா விழாவில் பங்கேற்காமல் ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டார்களே புறக்கணித்து நிற்க, தமிழில் அறிமுகமாகி புகழ்பெற்ற நடிகையொருவர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார்.

அவர் பாய்ஸ் படத்தில் ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெனிலியா டிஸூஸா. சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களிலும் நடித்துள்ளார்.

விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் நாயகிகளில் இவரும் ஒருவர் என்று கூறிவந்தது நினைவிருக்கலாம்.

தமிழில் அறிமுகமானாலும் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில்தான் இவர் நடித்து வருகிறார். கோவாவைச் சேர்ந்த இவர் மராட்டிய முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனை காதலிக்கிறார்.

ஐஃபா விழாவுக்கு ரிதேஷ் தேஷ்முக்கும் சென்றுள்ளார். எனவே காதலர் வழியில் ஜெனிலியாவும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளார். இந்த விழாவுக்குப் போவதன் மூலம் தென்னிந்திய திரையுலகை பகைத்துக் கொள்ள முடியும் என்று தெரிந்தும் அவர் பங்கேற்றுள்ளார்.

ஏற்கெனவே நடிகர் சங்கம் சார்பில் ஈழத் தமிழர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்தபோது, அதில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தவர் ஜெனிலியா. விளக்கம் கேட்டபோது, தான் நடிகர் சங்க உறுப்பினர் அல்ல என்று திமிராகக் கூறி, பின்னர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

பிபாஷா-ஜான் ஆப்ரகாம்:

பாலிவுட்டின் இன்னொரு பிரபல நாயகி பிபாஷா பாஸுவும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளார். இவரது காதலர் ஜான் ஆபிரகாமுடன் இவர் விழாவில் கலந்து கொண்டார். பிபாஷா தமிழில் சச்சின் படத்தில் விஜய்யுடன் குத்தாட்டம் போட்டவர்.

இவர்களைத் தவிர, அனில் கபூர், விவேக் ஓபராய் சல்மான்கான், ஹ்ரித்திக் ரோஷன், லாரா தத்தா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

இன்று ஷில்பா ஷெட்டி விழாவுக்கு வருவார் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...