Wednesday, December 29, 2010

காவலனாக நடிகர் டாக்டர் விஜய் ???

விஜய் நடித்த காவலன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளரான சக்தி சிதம்பரம்.

காவலன் படம் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இன்னும் படத்தை வெளியிடும் முடிவான தேதியை தயாரிப்பாளரால் அறிவிக்க முடியவில்லை. 

காவலன் சிக்கல்கள் தன்னை நெருக்குவதால், அதிலிருந்து மீள அரசியல் ரீதியான ஆதரவு தேசி அதிமுகவிடம் போனார் விஜய். தனது தந்தை எஸ் ஏ சநதிரசேகரனை அனுப்பி ஜெயலலிதாவைச் சந்திக்கவும் வைத்தார்.

இதைத் தொடர்ந்து காவலன் படத்தை ஜெயா டிவி வாங்கிக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது அதனை மறுத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் சக்தி சிதம்பரம்.

இந்தப் படத்தை அவர் ரூ 42 கோடிக்கு வாங்கியிருப்பதாகவும், தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்கு தந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Saturday, December 25, 2010

(ajith into politics?) அஜித் அரசியல் ஆசை?

அஜீத்தின் நடவடிக்கைகள் தங்களை வருத்தப்பட வைத்துள்ளதாக அவரது ரசிகர்கள் தெரிவித்தனர்.

நடிகர் அஜீத் அரசியலில் ஈடுபடவேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தி வந்தனர். தமிழக மெங்கும் போஸ்டர்கள் அச்சிட்டும், கூட்டங்கள் நடத்தியும் விருப்பங்களை தெரிவித்தனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அஜீத் சந்தித்த போது அவர் அ.தி.மு.க.வில் இணைவார் என்ற யூகங்களும் கிளம்பியது.

அதற்கேற்ப, சமீபத்திய தனது பேட்டியில் அரசியல் நிச்சயம் இறங்குவேன் என்றார்.

இந்த நிலையில் அஜீத்தை அரசியலில் ஈடுபட வற்புறுத்தி சென்னை பல்லாவரத்தில் நாளை மறுநாள் கூட்டம் நடத்த ரசிகர்களில் சிலர் ஏற்பாடு செய்தனர். இந்த கூட்டத்தில் அஜீத் பங்கேற்கிறார் என்று அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் தகவல் அனுப்பினர். வேன்களில் பெருங்கூட்டத்தை திரட்டி பல்லாவரம் புறப்பட்டு வருமாறும் வற்புறுத்தினர்.

இக்கூட்டத்தில் அஜீத்தை அரசியலில் ஈடுபட வற்புறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு செய்து இருந்தனர். இது பற்றி அஜீத்துக்கு தகவல் வந்ததும் கோபமானார்.

ரசிகர்களில் சிலர் சுய விளம்பரத்துக்காக கூட்டம் நடத்த இருப்பதாகவும் அதற்கு ஆதரவு வேண்டி இயக்கத்தின் சக உறுப்பினர்களிடையே விஷம பிரசாரம் செய்வதாகவும் செய்திகள் வந்துள்ளது. நான் அன்புக்கு கட்டு பட்டவன். நிர்ப்பந்தத்துக்கு பணிய மாட்டேன். என் கட்டளையை மீறி செயல்பட்டால் நற்பணி இயக்கத்தை கலைத்து விடுவேன் என அஜீத் எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து வெளியூர்களில் இருந்து சென்னை கூட்டத்துக்கு புறப்பட தயாராக இருந்த ரசிகர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்து விட்டனர். பல்லாவரம் கூட்டத்தையும் ரத்து செய்ய ரசிகர்கள் ஆலோசித்து வருகின்றனர். மீறி நடத்தினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

இதனால், வருத்தமடைந்த ரசிகர்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

Monday, December 20, 2010

நித்யானந்தா வுக்கு நோ..

சென்னை: திமுக பிரமுகர் கண்டோன்மெண்ட் சண்முகம் தயாரிக்க படத்திலிருந்து நித்யானந்தா, தேவநாதன் சம்பந்தப்பட்ட செக்ஸ் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

இந்து மதத்தின் பெயரால் ரஞ்சிதா போன்ற நடிகைகள் மற்றும் இளம் பெண்களுடன் காமக் களியாட்டம் நடத்திய நித்யானந்தா, காஞ்சீபுரத்தின் புராதனமான வைகுந்தப் பெருமாள் கோயில் கருவறையிலேயே பெண்களுடன் உல்லாசம் புரிந்து அதை வீடியோவும் எடுத்து வைத்த அர்ச்சகர் தேவநாதன் ஆகியோரை மையமாக வைத்து வில்லாளன் என்ற பெயரில் புதுப்படம் தயாராகி உள்ளது.

இதில் புதுமுகம் வெற்றி வேல் நாயகனாகவும், சுஷ்மிதா நாயகியாகவும் நடித்துள்ளனர். வெற்றிவேல் - சூரியன் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர். திமுக முன்னாள் எம்எல்ஏவும் நங்கநல்லூர் வேலன் திரையரங்க உரிமையாளருமான கண்டோன் மென்ட் சி.சண்முகம் தயாரித்துள்ளார்.

இந்த படம் முடிந்து தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் நித்யானந்தா, அர்ச்சகர் தேவநாதன் பற்றி இடம் பெற்றுள்ள காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். படத்துக்கு அனுமதி அளிக்கவும் மறுத்து விட்டனர்.

படத்தில் கதாநாயகன் வெற்றிவேல் போலீஸ் உதவி கமிஷனராக நடித்துள்ளார். அவரிடம் நித்யானந்தா வேடத்தில் வருபவர் மீது செக்ஸ் புகார் கூறி பெண்கள் புகார் அளிப்பது போலவும், இதையடுத்து நித்யானந்தா கைதாவது போலவும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன.

இதேபோல் அர்ச்சகர் தேவநாதன் வேடத்தில் வருபவர் கோவிலில் செக்ஸ் லீலையில் ஈடுபடுவது போன்றும் அவற்றை செல்போன் கேமராவில் படமாக்கி போலீ சில் சிக்குவது போன்றும் காட்சிகள் இருந்தன.

நித்யானந்தா, தேவநாதன் வழக்குகள் கோர்ட்டில் நடந்து வருவதால் அந்த காட்சிகள் இடம் பெறுவதை அனுமதிக்க முடியாது என்று தணிக்கை குழுவினர் எதிர்த்தனர்.

நடந்த சம்பவங்களைதான் காட்சியாக்கியுள்ளோம் என்று இயக்குனர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்கவில்லை. இறுதியில் நித்யானந்தா, தேவநாதன் காட்சிகளை தணிக்கை குழுவினர் வெட்டி நீக்கி விட்டு யூ சான்றிதழ் அளித்தனர்.

இதுபற்றி இயக்குனர்கள் வெற்றிவேல், "சூரியன் ஆகியோர் கூறும்போது, நித்யானந்தா, அர்ச்சகர் தேவநாதன் காட்சிகளை ஒரு பாடலில்தான் வைத்திருந்தோம். அதை தணிக்கை குழுவினர் அனுமதிக்காமல் வெட்டி நீக்கி விட்டனர். நடந்த உண்மைகளை மக்களிடம் சொல்வதைக் கூட தடுக்கிறார்களே... இந்த எந்த மாதிரி கருத்து சுதந்திரம் என்று புரியவில்லை," என்றனர்.

eesan download torrent

ஈசன் படம் டவுன்லோட்

ஒரு வரி கதை: ஒரு பெண் படிக்க பட்டணம் வருகிறாள், பொட்டலம் ஆகிறாள்.





என்னை கிளிக் செய்க.

நன்றி உயிர்வாணி.காம்

Monday, December 6, 2010

மதன் விட்ட பானம். புஸ்?

எச்சரிக்கை: குழந்தைகளும், பெண்களும் இந்தக் கட்டுரையை படிக்க வேண்டாம்.

விளம்பர வியூகங்கள் பல வகைப்பட்டவை. அதே தொழிலாகக் கொண்ட, "மார்க்கெட்டிங்' பிரிவினர், புதுப்புது யோசனைகளை செயல்படுத்துவர். ஆனால், கலைத்தாயின் தாகத்தைத் தணிக்க வந்த தலைமகனான கமல்ஹாசனைப் போல வித்தியாசமாக சிந்திப்பவர்கள், இதுவரை தமிழகத்தில் பிறக்கவில்லை; இனி பிறக்க வேண்டியதும் இல்லை.
தான் நடித்த, "மன்மதன் அம்பு' என்ற படத்தின் பாடல்கள் அடங்கிய கேசட் வெளியீட்டு விழாவை சமீபத்தில் நடத்தினார் கமல். அதில் இடம்பெறும் ஒரு பாடலை, சதாவதானியான அவரே இயற்றியும் உள்ளார். பெண் ஒருத்தி, வரலட்சுமியிடம் வரம் கேட்கும் விதமாக அந்தக் கவிதையை அமைத்துள்ளார் கமல். அதை, புரட்சி நடிகை த்ரிஷாவின் வேண்டுகோளுக்கு இணங்க, அழுத்தம் திருத்தமாக, நடை, உடை, பாவனைகளோடு சொல்லிக்காட்டினார்.அந்தக், "கவிதை' இப்படி போகிறது:

கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா
ஒழுங்கங் கெட்டவள் எச்சரிக்கை
ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்த பின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை
....

உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய்ச் சிக்கல் எச்சரிக்கை
அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக் கொள்
கூட்டல் ஒன்றே குறியென்றான பின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்
உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்
காமமெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்
....

கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்
குழந்தை வாயை முகர்ந்தது போலக்
கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்
காமக் கழிவுகள் கழுவும் வேளையும்
கூட நின்றுவன் உதவிட வேண்டும்
....

வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும்
....

இப்படிக் கணவன் வரவேண்டும் என
ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன்
வரந்தருவாள் என் வரலட்சுமியென
கடும் நோம்பு முடிந்ததும் தேடிப்போனேன் பீச்சுக்கு
....

தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்
முற்றும் துறந்து மங்கையரோடு
அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்
...

மூத்த அக்காள் கணவனுக்கு
முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
அக்காளில்லா வேளையில் அவன்
காளத்தி வேண்டும் என்றான்
...

வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு
வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?
உறங்கிக்கொண்டே இருக்கும் உந்தன்
அரங்கநாதன் ஆள் எப்படி?
பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும்
வாஸ்தவமாக நடப்பது உண்டோ?
அதுவும் இதுவும் உதுவும் செய்யும்
இனிய கணவர் யார்க்குமுண்டோ?
உனக்கேனுமது அமையப் பெற்றால்
உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்
நீ அதுபோல எனக்கும் அமையச் செய்யேன்
ஸ்ரீ வரலட்சுமி நமோஸ்துதே!
....

இதுதான் அந்தக், "கவிதை.'தமிழ் சினிமாவின் தரத்தை, "சர்வதேச லெவலுக்கு' உயர்த்தியே தீருவேன் என்பதில் கமல் எவ்வளவு உக்கிரமாக இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் தான், தான் நடிக்கும் படங்களில், பாத்ரூமில் உச்சா போகும் காட்சிகளையும், கதாநாயகியின் நாக்கைச் சுவைக்கும் காட்சியையும் தவறாமல் வைத்துவிடுவார். ஹாலிவுட் படங்களை வேறு எப்படி தான் அவரால் அசிங்கப்படுத்த முடியும்?இப்போது, "சர்வதேச லெவலையும்' தாண்டி, அடுத்த லெவலுக்கு கொண்டு போக எண்ணி, இந்தக் கவிதையைப் படைத்துள்ளார். காமம் முடிந்த பிறகு கரெக்டாக கழுவிக்கொள்ள வேண்டும் என கற்றுக்கொடுக்கிறார் கமல்.

"எய்ட்ஸ்' பிரசாரத்துக்கு இவரை விட சிறந்த ஆள், வேறெங்கு கிடைப்பார்?தன் காம வேட்கையைக் காட்டிக்கொண்ட மாதிரியும் ஆயிற்று; இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திய மாதிரியும் ஆயிற்று என, ஒரே கவிதையில் இரண்டு இலக்குகளை எட்டியுள்ளார் கமல்.இந்தக் கவிதையைப் படித்ததும் எண்ணற்ற கேள்விகள் மனதில் எழுகின்றன. கொஞ்சம் கோபமும் எட்டிப் பார்க்கிறது. நாகரீகமற்றவர்கள் முன் நாமும் நாகரீகமில்லாமல் செயல்படுவது
நாகரீகமில்லை என்பதால், நாகரீகமாக அடக்கிக்கொள்கிறேன்.


நன்றி தினமலர்.
Related Posts Plugin for WordPress, Blogger...