Monday, April 26, 2010

அஜித்தின் அடுத்த படம், இளம் இயக்குனர் ?


ஐரோப்பாவில் கார் ரேஸில் பிஸியாக இருக்கும் அ‌‌ஜீத் திடீரென்று இளம் இயக்குனர் ஒருவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ‌ஜி உங்க டைர‌க்சனில் நடிக்கணும். ஸ்கி‌‌ரிப்ட் ரெடி பண்ணுங்க. ஒரே வ‌ரியில் விருப்பத்தை கூறியிருக்கிறார் அ‌‌ஜீத். அந்த இயக்குனர், பொல்லாதவனை இயக்கிய வெற்றிமாறன். தனுஷ் நடிப்பில் ஆடுகளம் படத்தை முடித்திருக்கும் வெற்றிமாறன் அடுத்து சிம்பு நடிக்கும் படத்தை இயக்குகிறார். அ‌‌ஜீத்தே நேரடியாகப் பேசியதால் சிம்பு படத்தை அவர் தள்ளி வைத்தாலும் ஆச்ச‌ரியமில்லை என்கிறார்கள்.

Saturday, April 17, 2010

race race ajith..


கோடம்பாக்கத்தில் தயாரிப்பாளர்கள் கால்ஷீட்டுக்கு தவமிருக்கிறார்கள். படத்துக்கு ரூ 10 கோடிக்கும் மேல் கொட்டிக் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள்.

ஆனால் அஜீத் ஒரு முடிவெடுத்துவிட்டு கார் ரேஸுக்கு கிளம்பிவிட்டார். இப்போது இங்கிலாந்தில் நடக்கும் பார்முலா 2 பந்தயங்களில் பங்கேற்று வரும் அஜீத், இதுவரை நடந்த அனைத்து பயிற்சி ஓட்டங்களிலும் கடைசியாகவே வந்துள்ளார்.

நேற்று நடந்த பிராக்டீஸ் 1-ல் 21 வது இடத்திலும், இரண்டாவது பயிற்சி ரேஸில் 22வது இடத்திலும் வந்துள்ளார். இன்று காலை நடந்த பந்தயத்தில் 23 வது இடத்தைப் பிடித்துள்ளார் அஜீத். இதில் அவர் 7 லாப்ஸ்கள் மட்டுமே ஓட்டியுள்ளார்.

குறிப்பாக இன்றைய போட்டியில் அவரது கார் ரேஸ் ட்ராக்கை விட்டு வெளியேறி மண்ணுக்குள் புதைந்துவிட்டது.

சில தினங்களுக்கு முந்தைய பயிற்சிப் போட்டிகளிலும் அஜீத்தின் 28வது எண் கொண்ட வாகனம் கடைசி இடத்திலேயே வந்தது. ஒரு போட்டியில் அஜீத்தின் காரை ஓவர் டேக் செய்த சக போட்டியாளர், அஜீத்தை இரண்டாவது முறை தாண்டிச் சென்றதைப் பார்க்க முடிந்தது.

இந்த நிலையில் இன்று ஒரிஜினல் போட்டி துவங்குகிறது. இந்தப் போட்டியில் அஜீத் முதல் ஐந்து இடங்களுள் ஒன்றைப் பிடிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்தப் போட்டிகளில் ஜெயித்தால் அவர் அடுத்து மொராக்கோவில் நடக்கும் எப்2 ரேஸிலும் பங்கேற்பார்.

இந்தப் போட்டிகளெல்லாம் முடிந்த பிறகுதான் தனது 50 வது படத்தை ஆரம்பிக்கவிருக்கிறார் அஜீத். இந்தப் படத்தை அழகிரி மகன் தயாநிதி தயாரிக்கிறார், கவுதம் மேனன் இயக்குகிறார்.

Wednesday, April 14, 2010

லேகாவும் பிகினியும்


தென்னிந்தியப் பெண்கள் பாலிவுட் பிரவேசம் செய்வது, வைஜெயந்திமாலா தொடங்கி த்ரிஷா - விமலா ராமன் வரை அன்று முதல் இன்று வரை தொடர் கதையாக உள்ளது.

இவர்கள் வரிசையில் புதிதாகச் சேர்ந்துள்ளார் லேகா வாஷிங்டன். கொஞ்சம் இத்தாலி, கொஞ்சம் மராட்டியம், கொஞ்சம் பர்மீஸ் என கலவையான தோற்றம் கொண்ட சென்னைப் பெண் லேகா.

திரைப்பட இயக்கம் குறித்து அகமதாபாத் நிறுவனத்தில் தேர்ச்சி பெற்ற இவர், பின்னர் எஸ்எஸ் மியூசிக்கில் அறிவிப்பாளராக வலம் வந்தார். சிம்புவுடன் கெட்டவன் படத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்பு வந்து, போட்டோ ஷூட் எல்லாம் கூட எடுத்தார்கள்.

ஆனால் சிம்பு நிராகரித்துவிட்டார் லேகாவை. காரணம் கேட்டதற்கு, 'அந்தப் பெண்ணுக்கு நடிப்பு வரவில்லை' என்றார் ஓப்பனாக. பெரும் அதிர்ச்சியிலிருந்த லேகாவுக்கு ஆர் கண்ணன் மூலம் ஜெயம்கொண்டான் பட வாய்ப்பு வந்தது.

ஐபிஎல் மாட்சுகளில் அறிவிப்பாளராக ஒப்பந்தம் ஆனதும் அவரது எல்லை தமிழ் சினிமாவைத் தாண்டியது.

இப்போது பாலிவுட்டில் ஒரு முக்கியமான படத்தில் நாயகி லேகா வாஷிங்டன்.

கவர்ச்சியின் விளிம்பு எது என்று கேட்க வைக்கும் படு செக்ஸியான வேடத்தில் புகுந்து விளையாடியிருக்கிறாராம். படத்தில் பெரும்பாலும் அவரது காஸ்ட்யூம் பிகினிதானாம். அவருடன் சேர்ந்து விளையாடியிருப்பவர் ராஜீவ் கண்டேல்வால்.

படத்துக்குப் பெயர் பீட்டர் கயா காம் ஸே!--

Monday, April 12, 2010

worth waiting for Tamil avatar



Shankar has been facing one question of late – why the delay in releasing Endhiran? According to the director, Endhiran requires a lot of work and research and that is the major cause for the delay. He adds that the amount of work put in the making of Endhiran will be evident soon after it hits the silver screens.

The director rues that James Cameroon took nearly 12 years to complete Avatar, but he was never questioned on the delay.

He reveals that Endhiran will be on the lines of Avatar so the wait is worth it!

Tuesday, April 6, 2010

சோயிப்பிடம் போலீசார் கேட்ட 5 கேள்விகள்

சானியா திருமண சர்ச்சை பற்றிய புகாரில், ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல் நாள் நடைபெற்ற விசாரணையின்போது சோயிப்பிடம் போலீசார் கேட்ட கேள்விகள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

2005-ம் ஆண்டில், ஆயிஷாவுடன் ஐதராபாத் தாஜ் ரெசிடென்சி ஓட்டலில் தங்கினீர்களா?, துபாயில் ஆயிஷாவை சந்தித்தீர்களா?, ஆயிஷா வீட்டில் அளிக்கப்பட்ட விருந்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுடன் கலந்துகொண்டீர்களா?, ஆயிஷாவை சமாதானப்படுத்துவதற்காக அவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றீர்களா?, ஆயிஷாவுடன் டெலிபோன் மூலம் நடைபெற்ற திருமண ஒப்பந்த பத்திரத்தில் சாட்சிகள் யார்? ஆகிய 5 கேள்விகள் உள்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Monday, April 5, 2010

படமாகும் சம்பவங்கள் - நிதயானந்தா, சானியா மிர்சா, ரஞ்சிதா மற்றும் பலர்..


பரபரப்பும் திருப்பமும் நிறைந்த சமாச்சாரம் எதுவாக இருந்தாலும் படக்கென்று அதைச் 'சுட்டு' சுடச் சுட படமாகத் தருவது சினிமாக்காரர்கள் ஸ்டைல்.

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா- சோயப் மாலிக் காதல், திருமண சமாச்சாரங்கள், இடையில் புகுந்த ஆயிஷா சித்திக்கி விவகாரம் சினிமாவையே மிஞ்சும் விறுவிறுப்பு திருப்பங்களுடன் நகரும்போது விட்டுவிடுவார்களா என்ன.... இதோ கேமராவுடன் கிளம்பிவிட்டது ஒரு குழு படமாக்க.

குட்டை பாவாடை சர்ச்சை, இஸ்லாமிய எதிர்ப்பு, நண்பருடன் நடந்த நிச்சயதார்த்த முறிவு, சோயப் விவகாரம், ஆயிஷா குறுக்கீடு என திருப்பங்களுக்கு பஞ்சமில்லாத கதை சானியாவுடையது.

இந்த விவகாரங்கள் ஒன்றையும் விடாமல் சினிமாவில் பதிவு செய்யப் போகிறாராம் பிரபல இந்தி இயக்குனர் ஒருவர். இப்போதைக்கு படம் குறித்த அறிவிப்பை அறிவிக்காமல், சானியா - சோயப் திருமணத் தேதி வரை காத்திருக்கப் போகிறார்களாம்.

சானியாமிர்சா, சோயிப் மாலிக் அவரது முதல் மனைவி ஆயிஷா கேரக்டர்களில் நடிக்க நடிகர், நடிகை தேர்வு விறு விறுப்பாக நடப்பதாகக் கூறப்படுகிறது.



God and Sex

நித்தியானந்தா சாமியார் மற்றும் அவர் தொடர்பான செக்ஸ் லீலைகளை மையமாகக் கொண்டு படம் ஒன்றை எடுக்கிறார் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா.

நிஜ சம்பவங்களைப் படமாக்குவதில் கில்லாடி ராம் கோபால் வர்மா. சமீபத்தில் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நித்தியானந்தா சாமியாரின் செக்ஸ் லீலைகளை கையில் எடுத்துள்ளார் வர்மா.

காட் அன்ட் செக்ஸ் என்ற பெயரில் ஒரு படத்தை உருவாக்குகிறார் வர்மா. இது நித்தியானந்தாவின் செக்ஸ் லீலைகளையும் உள்ளடக்கியதாக இருக்குமாம்.

இதுகுறித்து வர்மா கூறுகையில், ஒரு ஆசிரமத்தின் உள்ளே நடக்கும் ரகசியங்கள் குறித்த படம் இது. இது செக்ஸ் லீலைகளாக மட்டுமே இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. மாறாக, உள்ளே நடக்கும் கோஷ்டிப் பூசல்களாக இருக்கலாம். அவர்களுக்கு எதிராக நடப்போரின் செயல்களை கூறுவதாகவும் இருக்கலாம்.

நித்தியானந்தா விவகாரத்தின் மூலம் ஒரு விஷயம் தெளிவாகியுள்ளது. அதாவது

மனிதனால் கடவுளைக் கூட வெல்ல முடியும், ஆனால் காமத்தை வெல்ல முடியாது என்பதே அது.




இந்த படத்துக்கு ஹீரோ செலக்ட் பண்ணன்களோ பண்ணலையோ, அனா நடிகை ரஞ்சிதா தான்..

Sunday, April 4, 2010

rajinikanth complaints about mallika's half nude dance in public



அரைகுறை ஆடையில் ஆபாசமாக நடனமாடியதாக ரஜினிகாந்த் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது மகாராஷ்டிர மாநிலம் பந்தர்கவ்டா கோர்ட்.

முழுசாய் உடையணிய மாட்டேன் என்று சபதமே எடுத்துள்ளார் மல்லிகா ஷெராவத். விழாக்கள், நடன நிகழ்ச்சிகள் என எங்கு போனாலும் இவரது தம்மாத்துண்டு உடை பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிடும்.

சமீபத்தில் இவர் பங்கேற்ற நடன நிகழ்ச்சி ஒன்றில் மிகக் குறைந்த உடையணிந்து ஆபாச அங்க அசைவுகளைக் காட்டி, பார்வையாளருக்கு அறுவறுப்பை உண்டாக்கியதாக மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் புகார் தெரிவித்திருந்தார்.

இத்துடன் நில்லாமல் யவத்மால் மாவட்டத்தில் உள்ள பந்தர்கவ்டா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், மல்லிகாவின் ஆபாச அங்க அசைவுகளைக் கொண்ட நடனக் காட்சிகள் அடங்கிய வீடியோ சி.டி., போட்டோக்களையும் ஆதாரமாக வைத்து வழக்கும் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் , மல்லிகா ஷெராவத்துக்கு மும்பை வெர்சோவா போலீஸ் நிலையத்தின் மூலமாக சம்மன் அனுப்பியது.

ஆனால் கோர்ட்டில் ஆஜராக மல்லிகாவுக்கு அவகாசம் வேண்டும் என அவரது வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதால் இருமுறை அவகாசம் வழங்கினார் மாஜிஸ்திரேட்.

மூன்றாவது முறை விசாரணையின்போது, மல்லிகா கட்டாயம் கோர்ட்டுக்கு வரவேண்டும் என்று உத்தரவிட்டார் மாஜிஸ்திரேட்டு. ஆனால் அப்போதும் மல்லிகா ஆஜராகாததால், மல்லிகாவுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் வழக்கு தொடர்ந்த ரஜினிகாந்த்.

இதையடுத்து மல்லிகா ஷெராவத்துக்கு எதிராக ஜாமீனில் விடத்தக்க பிடிவாரண்டு பிறப்பித்து பந்தர்கவ்டா நீதிமன்றம் உத்தரவிட்டது.
Related Posts Plugin for WordPress, Blogger...