Monday, May 31, 2010

நன்றி நன்றி நன்றி, - சீமான்

சென்னை: எமது தொப்புள்கொடி உறவுகளின் ரத்தத்தால் நனைந்த இலங்கையில், தமிழர் படுகொலையைக் கொண்டாடும் வகையில் இரக்கமற்று நடத்தப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் இந்திய நடிகர் - நடிகையர் யாரும் பங்கேற்க வேண்டாம். மீறிப் பங்கேற்போருக்கு எதிராக பெரும் போராட்டம் தொடரும்" என்று நாம் தமிழர் இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:

நாம் தமிழர் இயக்கத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு மனிதாபிமான அடிப்படையில், இலங்கையில் நடக்கும் இந்தியத் திரைப்பட விழாவுக்குச் செல்வதைத் தவிர்த்த ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், கமல்ஹாஸன், மணிரத்னம், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு நன்றி.

மலையாளம், தெலுங்கு, கன்னடத் திரையுலகைச் சேர்ந்த மம்முட்டி, மோகன்லால், திலீப், வெங்கடேஷ், நாகார்ஜுன், புனித் ராஜ்குமார் போன்ற கலைஞர்களும் இந்த விழாவைப் புறக்கணித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இவர்களெல்லாம் சக மனிதனாக தமிழர் உணர்வுகளை மதித்துள்ளார்கள். அந்த உணர்வுக்கு நன்றி செலுத்துகிறோம்.

அதேபோல இந்த விஷயத்தில் மிகத் தெளிவான முடிவை எடுத்துள்ள தென்னிந்திய திரைப்படத்துறை, கொழும்பு விழாவில் பங்கேற்கும் நடிகர்களுக்கு தடையை அறிவித்துள்ளது. இது மிகுந்த ஆறுதலைத் தருகிறது. தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்புக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவர்களைத் தவிர, மனித உணர்வற்று இலங்கை விழாவுக்கு போக விரும்புபவர்களுக்கு எதிரான போராட்டம் தொடரும்.

இன்று காலையில் கூட இந்தியத் திரைப்பட விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கைதாகியிருக்கிறார்கள். இவர்களும் மற்ற நடிகர்களைப் போல இலங்கை செல்லமாட்டோம் என்று அறிவிப்பார்கள் என்று நம்புகிறோம்.

இந்தியத் திரைப்பட விழாவில் ஒரு இந்திய நட்சத்திரம் கூட பங்கேற்கவில்லை என்ற நிலை உருவாக வேண்டும். இனப் படுகொலை செய்த ஒரு நாடு சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்தப்பட வேண்டும். போர்க் குற்றங்களுக்கு உரிய தண்டனையை ராஜபக்சே அரசு அனுபவித்தே தீர வேண்டும். அதற்கு திரைத்துறையினரின் இந்தப் புறக்கணிப்பு பெருமளவு உதவும் என்பதை மனதில் கொண்டு, தமிழ் இனத்தின் உரிமைக்கும் விடிவுக்கும் குரல் கொடுக்க முன்வருமாறு, கேட்டுக்கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.

Sunday, May 30, 2010

பிக்னிக்கு மொழி இல்லை , பிட்டுக்கும் .......

‘ஜெயம் கொண்டான்’ படத்தில் அறிமுகமானவர் லேகா. ஷிவா ஜோடியாக ‘குவாட்டர் கட்டிங்’கில் நடித்தபடி இந்திக்கும் சென்று வந்துவிட்டார்.

இந்தி வாய்ப்பு எப்படி?

ஐபிஎல் போட்டிகளை தொகுத்து வழங்கியபோது இந்தியில் ‘பீட்டர் கயா காம்ஸே’ பட வாய்ப்பு கிடைத்தது. இதில் இயக்குனர் ராஜு கண்டேல்வால் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடி. இங்கிலாந்தை சேர்ந்த ஜான் ஓயேல் இயக்கியுள்ளார். இதில் மிகவும் கோபக்காரியாக நடித்துள்ளேன். பழி வாங்கும் குணம் கொண்டவள். இந்த வேடமே புதுமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஜூலையில் ரிலீசாகிறது.

பிகினியிலும் நடித்துள்ளீர்களாமே?

அது ஒரு பாடல் காட்சிக்காக அப்படி நடித்தேன். இந்த படத்தில் அதிக கிளாமர் காட்டியிருப்பதாக சொல்வதில் உண்மையில்லை.

தமிழில் பிகினியில் நடிப்பீர்களா?

இந்தி சினிமா என்பதால் அப்படி நடித்தேன் என சிலர் விமர்சிக்கலாம். அப்படி கிடையாது. கதைக்கு தேவைப்பட்டால் தமிழிலும் பிகினி அணிய தயார்.

‘குவாட்டர் கட்டிங்’ ஷூட்டிங் முடிந்ததா?

முடிந்துவிட்டது. இது முழுக்க ஒரே ஒரு இரவில் நடக்கும் கதை. 19 வயது பிளஸ் டூ மாணவி வேடம். தற்கொலைக்காக முயற்சி செய்கிறேன். அப்போது சந்திக்கும் மனிதர்கள், எனது வாழ்க¢கையை மாற்றுகிறார்கள். ரசிகர்களுக்கு இந்த படம் புது அனுபவத்தை தரும்.

அடுத்து?

கன்னடத்தில் சமீர் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறேன். இந்திரஜித் லங்கேஷ் இயக்கியுள்ளார். ‘குவாட்டர் கட்டிங்’கை தொடர்ந்து புஷ்கர்&காயத்ரி இயக்கும் ‘ராக்கோழி’ படத்திலும் நடிக்க உள்ளேன்.

Saturday, May 29, 2010

தி.மு.க.வில் சேரப்போகிறார் வடிவேலு!

வதந்தி : நடிகை குஷ்புவைத் தொடர்ந்து நடிகர் வடிவேலுவும் தி.மு.க.வில் சேரப்போகிறார்.
விசாரித்த உண்மை : இதில் பாதி உண்மை இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே விஜயகாந்துடன் பகையை வளர்த்துக் கொண்ட வடிவேலு, அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவேன், விஜயகாந்தை டெபாசிட் இழக்க வைப்பேன் என்றெல்லாம் வீர வசனம் பேசியது நினைவிருக்கலாம். விஜயகாந்தை எதிர்த்து தனி ஆளாக நின்றால் அது நிறை‌வேறாது. மேலும் அடுத்தடுத்து சர்ச்‌சைகளில் சிக்கி வரும் வடிவேலுவிடம், பேசாமல் ஆளுங்கட்சியில் சேர்ந்து விடுங்கள். எல்லா பிரச்னைகளும் தீர்ந்து விடும் என சிலர் யோசனை தெரிவித்து வருகிறார்களாம். ஆனால் வடிவேலுவிடம் இதுபற்றி கேட்டால், எந்த அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. என்னை தி.மு.க.வில் இணையும்படி யாரும் வற்புறுத்தவும் இல்லை. மக்களுடன் மக்களாக இருந்து அனைவரையும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். தி.மு.க.வில் சேர வேண்டுமென முடிவெடுத்தால் அந்த முடிவில் இருந்து என்னை யாரும் தடுத்து விடமுடியாது, என்று கூறுகிறார். (நெருப்பில்லாமல் புகையாதே!)

Sunday, May 23, 2010

கிடுக்கு பிடியில் இளையதளபதி டாக்டர் விஜய்

Ilayathalapathy Vijay is under tremendous pressure from the powerful distributors and theatres lobby in Tamil Nadu.

An emergency meeting of the theatres association is going to be held today (May 22) in Chennai.

A spokesperson of the Chengalpet-Kanchipuram Theatre association said: “ All recent Vijay films including the latest Sura have been failures. We have lost crores paying MG’s in screening Azhagiya Thamizh Magan, Kuruvi, Villu, Vettaikkaran and now Sura, which is a washout”.

Now they want Vijay to do a film for the trade to compensate the losses they incurred by screening his films.

The spokesperson made it clear that they want Vijay to do it free otherwise they will issue a red card against the star and also boycott his films in future.

Monday, May 17, 2010

singam trailer

Russell Crowe as Robinhood

BEVERLY HILLS — — Academy Award winner Russell Crowe is the latest actor to portray Nottingham's outlaw hero, in Ridley Scott's "Robin Hood," which opened in Chicago on Friday. For this first "Dean's List" column, I was the guest of Universal Pictures in Beverly Hills to talk with Crowe who — working with director Scott — won the Oscar for best actor in 2000's "Gladiator." Crowe has also earned critical praise for his performances in "A Beautiful Mind," "The Insider" and "State of Play."

Dean Richards: Why has the Robin Hood legend endured through literature and for so many movie and television incarnations?

Russell Crowe: Depending on with which historian you go, there are some people who believe the core of Robin Hood starts in 870 A.D. If that's true, then this story is the oldest tale in the English language in which the central character is an Englishman. I think that there is a very compelling center to him. I like that there is somebody out there who cares enough to redress the balance of power and steal from the rich to give to the poor, even though in our version, we don't use that in a literal sense. We sort of leap off into the metaphorical, where we're looking at the rights and privileges of the ruling class.

Some photos of robin hood













நடிகர் சிங்கமுத்து திடீர் கைது

சென்னை: நடிகர் வடிவேலுவின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் நடிகர் சிங்கமுத்து நேற்று திடீரென கைது செய்யப்பட்டு 13 நாள் சிறைக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

வடிவேலு, சிங்கமுத்து இருவரும் இணை பிரியா நண்பர்களாக, திரையில் வெடிச் சிரிப்பை வரவழைக்கும் காமெடி விருந்து படைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் நிலப் பிரச்சினை காரணமாக இருவரும் எதிரெதிர் துருவங்களாக மாறிப் போயினர். கொலை மிரட்டல் புகார்களைக் கூறும் அளவுக்கு இருவருக்குள்ளும் பிரச்சினை முற்றியது.

வடிவேலு, சிங்கமுத்து மீது ஏற்கனவே 3 வழக்குகள் போட்டுள்ளார். 2 வழக்கு போலீஸ் விசாரணை யிலும், ஒரு வழக்கு சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டிலும் விசாரணையில் உள்ளது. ரூ.1 கோடி நில மோசடி செய்து விட்டதாக வடிவேலு கொடுத்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்கு ஒன்றை சிங்கமுத்து மீது பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் சிங்கமுத்து முன்ஜாமீன் வாங்கியுள்ளார்.

அடுத்து சைதாப்பேட்டை கோர்ட்டில் கிரிமினல் வழக்கு ஒன்றையும் வடிவேலு, சிங்கமுத்து மீது போட்டுள்ளார். 3-வதாக கடந்த மாதம் வடிவேலுவின் மேலாளர் சங்கர் கொடுத்த புகாரின் பேரில் சிங்கமுத்து மீதும், படஅதிபர் கண்ணன் மீதும் சென்னை விருகம்பாக்கம் போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் சிங்கமுத்து கைதாகாமல் தப்பித்து முன் ஜாமீன் பெற்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று காலையில் நடிகர் வடிவேலுவின் மேலாளர் சங்கர் மீண்டும் ஒரு புகார் மனுவை விருகம்பாக்கம் போலீசில் கொடுத்தார். சென்னை சாலிகிராமம் வேதவல்லி தெருவில் உள்ள வடிவேலுவின் அலுவலகத்தில் இருந்த போது, சிங்கமுத்து நேரில் வந்து தன்னை கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த புகாரில் சங்கர் தெரிவித்து இருந்தார். இந்த புகார் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் சிங்கமுத்து மீது 2-வதாக ஒரு கொலை மிரட்டல் வழக்கை பதிவு செய்தனர்.

இந்த புகார் கொடுக்கப்பட்டதும், இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதும், மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. வழக்கமாக இதுபோல் புகார் கொடுக்கும்போது வடிவேலு பத்திரிகைகளுக்கு தெரிவிப்பது வழக்கம். நேற்று அதுபோல் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் சென்னை ராமாவரம், கோத்தாரி நகர் 8-வது தெருவில் உள்ள தனது வீட்டில் மதியம் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது சிங்கமுத்து வீட்டுக்கு போலீஸார் சென்று அதிரடியாக கைது செய்தனர்.

கைதான தகவல் வெளியிலும் தரப்படவில்லை. மாலை நாலரை மணி வரையில் இது குறித்து யாருக்குமே தெரியவில்லை. சிங்கமுத்துவை சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு கொண்டு சென்ற போதுதான் பத்திரிகைகளுக்கு தகவல் பரவியது.

மாலை 5.30 மணிக்கு சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட் மலர்விழி முன்பு சிங்கமுத்துவை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட், சிங்கமுத்துவை வருகிற 28-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

அப்போது, சிங்கமுத்து, தான் வருமானவரி கட்டுபவர் என்றும், எனவே தனக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை வைத்தார். அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அறிவழகன் உடனடியாக ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்.

பின்னர் சிங்கமுத்துவை போலீஸார் பாதுகாப்புடன் புழல் சிறைக்குக் கொண்டு போய் அடைத்தனர்.

Tuesday, May 11, 2010

ஐஸ்,மணி இலங்கை செல்லவில்லை.

கொழும்புவில் நடக்கும் சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்கவிருப்பதாலும், வேறு சில காரணங்களாலும் அவர் ஐஃபா விருது விழாவில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ஷாரூக்கான் ஆகியோர் கொழும்பு விழாவில் பங்கேற்பதை யாராலும் தடுக்க முடியாது என்று இலங்கை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா கொக்கரித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அமிதாப் குடும்பம் ஐஃபா விழாவில் பங்கேற்கக் கூடாது என்று கோரி தமிழ் அமைப்புகள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன.

நாம் தமிழர் அமைப்பு இன்றே மும்பையில் உள்ள அமிதாப் வீட்டின் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் துவங்கியுள்ளனர்.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஆகியோர் இலங்கை செல்லும் திட்டத்திலில்லை என்றும், ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, கேன்ஸ் திரைப்பட விழாவின் துவக்க நாள் நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வருகிறார் ஐஸ்வர்யா ராய் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ராய் கொழும்பு செல்லாததன் மூலம், அவர் நடித்துள்ள தமிழ்ப் படங்களான ரஜினியின் எந்திரன் மற்றும் மணிரத்னத்தின் ராவணனுக்கு வரவிருந்த பல நெருக்கடிகளைத் தவிர்த்துள்ளது.

Thursday, May 6, 2010

உலக கோப்பை டி 20 அட்டவணை [t20 super 8 schedule]


Group EGroup F
A1: PakistanB1: Sri Lanka
B2: New ZealandA2: Australia
C1: South AfricaC2: India
D2: EnglandD1: West Indies


ICC World Twenty20 Super 8’s 2010 Fixture
Thu May 6
13:30 GMT | 09:30 local | 19:00 IST
13th Match – Group E – Pakistan v England
Kensington Oval, Bridgetown, Barbados
Thu May 6
17:30 GMT | 13:30 local | 23:00 IST
14th Match – Group E – South Africa v New Zealand
Kensington Oval, Bridgetown, Barbados
Fri May 7
13:30 GMT | 09:30 local | 19:00 IST
15th Match – Group F – India v Australia
Kensington Oval, Bridgetown, Barbados
Fri May 7
17:30 GMT | 13:30 local | 23:00 IST
16th Match – Group F – West Indies v Sri Lanka
Kensington Oval, Bridgetown, Barbados
Sat May 8
13:30 GMT | 09:30 local | 19:00 IST
17th Match – Group E – New Zealand v Pakistan
Kensington Oval, Bridgetown, Barbados
Sat May 8
17:30 GMT | 13:30 local | 23:00 IST
18th Match – Group E – England v TBC
Kensington Oval, Bridgetown, Barbados
Sun May 9
13:30 GMT | 09:30 local | 19:00 IST
19th Match – Group F – West Indies v India
Kensington Oval, Bridgetown, Barbados
Sun May 9
17:30 GMT | 13:30 local | 23:00 IST
20th Match – Group F – Sri Lanka v Australia
Kensington Oval, Bridgetown, Barbados
Mon May 10
13:30 GMT | 09:30 local | 19:00 IST
21st Match – Group E – Pakistan v TBC
Beausejour Stadium, Gros Islet, St Lucia
Mon May 10
17:30 GMT | 13:30 local | 23:00 IST
22nd Match – Group E – England v New Zealand
Beausejour Stadium, Gros Islet, St Lucia
Tue May 11
17:00 GMT | 13:00 local | 22:30 IST
23rd Match – Group F – India v Sri Lanka
Beausejour Stadium, Gros Islet, St Lucia
Tue May 11 D/N
19:35 local | 08:35 GMT | 14:05 IST
24th Match – Group F – West Indies v Australia
Beausejour Stadium, Gros Islet, St Lucia
Related Posts Plugin for WordPress, Blogger...