Wednesday, December 29, 2010

காவலனாக நடிகர் டாக்டர் விஜய் ???

விஜய் நடித்த காவலன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளரான சக்தி சிதம்பரம்.

காவலன் படம் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இன்னும் படத்தை வெளியிடும் முடிவான தேதியை தயாரிப்பாளரால் அறிவிக்க முடியவில்லை. 

காவலன் சிக்கல்கள் தன்னை நெருக்குவதால், அதிலிருந்து மீள அரசியல் ரீதியான ஆதரவு தேசி அதிமுகவிடம் போனார் விஜய். தனது தந்தை எஸ் ஏ சநதிரசேகரனை அனுப்பி ஜெயலலிதாவைச் சந்திக்கவும் வைத்தார்.

இதைத் தொடர்ந்து காவலன் படத்தை ஜெயா டிவி வாங்கிக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது அதனை மறுத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் சக்தி சிதம்பரம்.

இந்தப் படத்தை அவர் ரூ 42 கோடிக்கு வாங்கியிருப்பதாகவும், தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்கு தந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Saturday, December 25, 2010

(ajith into politics?) அஜித் அரசியல் ஆசை?

அஜீத்தின் நடவடிக்கைகள் தங்களை வருத்தப்பட வைத்துள்ளதாக அவரது ரசிகர்கள் தெரிவித்தனர்.

நடிகர் அஜீத் அரசியலில் ஈடுபடவேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தி வந்தனர். தமிழக மெங்கும் போஸ்டர்கள் அச்சிட்டும், கூட்டங்கள் நடத்தியும் விருப்பங்களை தெரிவித்தனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அஜீத் சந்தித்த போது அவர் அ.தி.மு.க.வில் இணைவார் என்ற யூகங்களும் கிளம்பியது.

அதற்கேற்ப, சமீபத்திய தனது பேட்டியில் அரசியல் நிச்சயம் இறங்குவேன் என்றார்.

இந்த நிலையில் அஜீத்தை அரசியலில் ஈடுபட வற்புறுத்தி சென்னை பல்லாவரத்தில் நாளை மறுநாள் கூட்டம் நடத்த ரசிகர்களில் சிலர் ஏற்பாடு செய்தனர். இந்த கூட்டத்தில் அஜீத் பங்கேற்கிறார் என்று அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் தகவல் அனுப்பினர். வேன்களில் பெருங்கூட்டத்தை திரட்டி பல்லாவரம் புறப்பட்டு வருமாறும் வற்புறுத்தினர்.

இக்கூட்டத்தில் அஜீத்தை அரசியலில் ஈடுபட வற்புறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு செய்து இருந்தனர். இது பற்றி அஜீத்துக்கு தகவல் வந்ததும் கோபமானார்.

ரசிகர்களில் சிலர் சுய விளம்பரத்துக்காக கூட்டம் நடத்த இருப்பதாகவும் அதற்கு ஆதரவு வேண்டி இயக்கத்தின் சக உறுப்பினர்களிடையே விஷம பிரசாரம் செய்வதாகவும் செய்திகள் வந்துள்ளது. நான் அன்புக்கு கட்டு பட்டவன். நிர்ப்பந்தத்துக்கு பணிய மாட்டேன். என் கட்டளையை மீறி செயல்பட்டால் நற்பணி இயக்கத்தை கலைத்து விடுவேன் என அஜீத் எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து வெளியூர்களில் இருந்து சென்னை கூட்டத்துக்கு புறப்பட தயாராக இருந்த ரசிகர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்து விட்டனர். பல்லாவரம் கூட்டத்தையும் ரத்து செய்ய ரசிகர்கள் ஆலோசித்து வருகின்றனர். மீறி நடத்தினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

இதனால், வருத்தமடைந்த ரசிகர்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

Monday, December 20, 2010

நித்யானந்தா வுக்கு நோ..

சென்னை: திமுக பிரமுகர் கண்டோன்மெண்ட் சண்முகம் தயாரிக்க படத்திலிருந்து நித்யானந்தா, தேவநாதன் சம்பந்தப்பட்ட செக்ஸ் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

இந்து மதத்தின் பெயரால் ரஞ்சிதா போன்ற நடிகைகள் மற்றும் இளம் பெண்களுடன் காமக் களியாட்டம் நடத்திய நித்யானந்தா, காஞ்சீபுரத்தின் புராதனமான வைகுந்தப் பெருமாள் கோயில் கருவறையிலேயே பெண்களுடன் உல்லாசம் புரிந்து அதை வீடியோவும் எடுத்து வைத்த அர்ச்சகர் தேவநாதன் ஆகியோரை மையமாக வைத்து வில்லாளன் என்ற பெயரில் புதுப்படம் தயாராகி உள்ளது.

இதில் புதுமுகம் வெற்றி வேல் நாயகனாகவும், சுஷ்மிதா நாயகியாகவும் நடித்துள்ளனர். வெற்றிவேல் - சூரியன் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர். திமுக முன்னாள் எம்எல்ஏவும் நங்கநல்லூர் வேலன் திரையரங்க உரிமையாளருமான கண்டோன் மென்ட் சி.சண்முகம் தயாரித்துள்ளார்.

இந்த படம் முடிந்து தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் நித்யானந்தா, அர்ச்சகர் தேவநாதன் பற்றி இடம் பெற்றுள்ள காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். படத்துக்கு அனுமதி அளிக்கவும் மறுத்து விட்டனர்.

படத்தில் கதாநாயகன் வெற்றிவேல் போலீஸ் உதவி கமிஷனராக நடித்துள்ளார். அவரிடம் நித்யானந்தா வேடத்தில் வருபவர் மீது செக்ஸ் புகார் கூறி பெண்கள் புகார் அளிப்பது போலவும், இதையடுத்து நித்யானந்தா கைதாவது போலவும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன.

இதேபோல் அர்ச்சகர் தேவநாதன் வேடத்தில் வருபவர் கோவிலில் செக்ஸ் லீலையில் ஈடுபடுவது போன்றும் அவற்றை செல்போன் கேமராவில் படமாக்கி போலீ சில் சிக்குவது போன்றும் காட்சிகள் இருந்தன.

நித்யானந்தா, தேவநாதன் வழக்குகள் கோர்ட்டில் நடந்து வருவதால் அந்த காட்சிகள் இடம் பெறுவதை அனுமதிக்க முடியாது என்று தணிக்கை குழுவினர் எதிர்த்தனர்.

நடந்த சம்பவங்களைதான் காட்சியாக்கியுள்ளோம் என்று இயக்குனர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்கவில்லை. இறுதியில் நித்யானந்தா, தேவநாதன் காட்சிகளை தணிக்கை குழுவினர் வெட்டி நீக்கி விட்டு யூ சான்றிதழ் அளித்தனர்.

இதுபற்றி இயக்குனர்கள் வெற்றிவேல், "சூரியன் ஆகியோர் கூறும்போது, நித்யானந்தா, அர்ச்சகர் தேவநாதன் காட்சிகளை ஒரு பாடலில்தான் வைத்திருந்தோம். அதை தணிக்கை குழுவினர் அனுமதிக்காமல் வெட்டி நீக்கி விட்டனர். நடந்த உண்மைகளை மக்களிடம் சொல்வதைக் கூட தடுக்கிறார்களே... இந்த எந்த மாதிரி கருத்து சுதந்திரம் என்று புரியவில்லை," என்றனர்.

eesan download torrent

ஈசன் படம் டவுன்லோட்

ஒரு வரி கதை: ஒரு பெண் படிக்க பட்டணம் வருகிறாள், பொட்டலம் ஆகிறாள்.





என்னை கிளிக் செய்க.

நன்றி உயிர்வாணி.காம்

Monday, December 6, 2010

மதன் விட்ட பானம். புஸ்?

எச்சரிக்கை: குழந்தைகளும், பெண்களும் இந்தக் கட்டுரையை படிக்க வேண்டாம்.

விளம்பர வியூகங்கள் பல வகைப்பட்டவை. அதே தொழிலாகக் கொண்ட, "மார்க்கெட்டிங்' பிரிவினர், புதுப்புது யோசனைகளை செயல்படுத்துவர். ஆனால், கலைத்தாயின் தாகத்தைத் தணிக்க வந்த தலைமகனான கமல்ஹாசனைப் போல வித்தியாசமாக சிந்திப்பவர்கள், இதுவரை தமிழகத்தில் பிறக்கவில்லை; இனி பிறக்க வேண்டியதும் இல்லை.
தான் நடித்த, "மன்மதன் அம்பு' என்ற படத்தின் பாடல்கள் அடங்கிய கேசட் வெளியீட்டு விழாவை சமீபத்தில் நடத்தினார் கமல். அதில் இடம்பெறும் ஒரு பாடலை, சதாவதானியான அவரே இயற்றியும் உள்ளார். பெண் ஒருத்தி, வரலட்சுமியிடம் வரம் கேட்கும் விதமாக அந்தக் கவிதையை அமைத்துள்ளார் கமல். அதை, புரட்சி நடிகை த்ரிஷாவின் வேண்டுகோளுக்கு இணங்க, அழுத்தம் திருத்தமாக, நடை, உடை, பாவனைகளோடு சொல்லிக்காட்டினார்.அந்தக், "கவிதை' இப்படி போகிறது:

கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா
ஒழுங்கங் கெட்டவள் எச்சரிக்கை
ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்த பின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை
....

உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய்ச் சிக்கல் எச்சரிக்கை
அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக் கொள்
கூட்டல் ஒன்றே குறியென்றான பின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்
உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்
காமமெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்
....

கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்
குழந்தை வாயை முகர்ந்தது போலக்
கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்
காமக் கழிவுகள் கழுவும் வேளையும்
கூட நின்றுவன் உதவிட வேண்டும்
....

வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும்
....

இப்படிக் கணவன் வரவேண்டும் என
ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன்
வரந்தருவாள் என் வரலட்சுமியென
கடும் நோம்பு முடிந்ததும் தேடிப்போனேன் பீச்சுக்கு
....

தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்
முற்றும் துறந்து மங்கையரோடு
அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்
...

மூத்த அக்காள் கணவனுக்கு
முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
அக்காளில்லா வேளையில் அவன்
காளத்தி வேண்டும் என்றான்
...

வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு
வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?
உறங்கிக்கொண்டே இருக்கும் உந்தன்
அரங்கநாதன் ஆள் எப்படி?
பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும்
வாஸ்தவமாக நடப்பது உண்டோ?
அதுவும் இதுவும் உதுவும் செய்யும்
இனிய கணவர் யார்க்குமுண்டோ?
உனக்கேனுமது அமையப் பெற்றால்
உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்
நீ அதுபோல எனக்கும் அமையச் செய்யேன்
ஸ்ரீ வரலட்சுமி நமோஸ்துதே!
....

இதுதான் அந்தக், "கவிதை.'தமிழ் சினிமாவின் தரத்தை, "சர்வதேச லெவலுக்கு' உயர்த்தியே தீருவேன் என்பதில் கமல் எவ்வளவு உக்கிரமாக இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் தான், தான் நடிக்கும் படங்களில், பாத்ரூமில் உச்சா போகும் காட்சிகளையும், கதாநாயகியின் நாக்கைச் சுவைக்கும் காட்சியையும் தவறாமல் வைத்துவிடுவார். ஹாலிவுட் படங்களை வேறு எப்படி தான் அவரால் அசிங்கப்படுத்த முடியும்?இப்போது, "சர்வதேச லெவலையும்' தாண்டி, அடுத்த லெவலுக்கு கொண்டு போக எண்ணி, இந்தக் கவிதையைப் படைத்துள்ளார். காமம் முடிந்த பிறகு கரெக்டாக கழுவிக்கொள்ள வேண்டும் என கற்றுக்கொடுக்கிறார் கமல்.

"எய்ட்ஸ்' பிரசாரத்துக்கு இவரை விட சிறந்த ஆள், வேறெங்கு கிடைப்பார்?தன் காம வேட்கையைக் காட்டிக்கொண்ட மாதிரியும் ஆயிற்று; இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திய மாதிரியும் ஆயிற்று என, ஒரே கவிதையில் இரண்டு இலக்குகளை எட்டியுள்ளார் கமல்.இந்தக் கவிதையைப் படித்ததும் எண்ணற்ற கேள்விகள் மனதில் எழுகின்றன. கொஞ்சம் கோபமும் எட்டிப் பார்க்கிறது. நாகரீகமற்றவர்கள் முன் நாமும் நாகரீகமில்லாமல் செயல்படுவது
நாகரீகமில்லை என்பதால், நாகரீகமாக அடக்கிக்கொள்கிறேன்.


நன்றி தினமலர்.

Tuesday, September 7, 2010

nithyananda in telugu film | நித்யானந்தா லீலை

நித்தியானந்தா-ரஞ்சிதா செக்ஸ் லீலை குறித்து தெலுங்கில் சினிமா ப் படம் எடுக்கவுள்ளனராம்.

நிஜக் கதைகளை சூட்டோடு சூடாக படமாக எடுத்து விடுவது இந்தியத் திரையுலகினரின் வழக்கம். அதுவும் செக்ஸ் சம்பந்தப்பட்ட சர்ச்சைகள் என்றால் சட்டுப் புட்டென்று படமாக்கி விடுவார்கள். அந்தவகையில் தற்போது நித்தியானந்தா-ரஞ்சிதா விவகாரத்தையும் படமாக்க கிளம்பியுள்ளனர்-தெலுங்கில்.

நித்தியானந்தாவுக்கு படுக்கை அறையில் பலவிதமான சேவைகளை நடிகை ரஞ்சிதா செய்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் சினிமா பாணியில் நான் அவன் இல்லை என்று கூறி விட்டார் நித்தியானந்தா. ரஞ்சிதாவும், நான் செய்தது சேவை, வீடியோவை மார்பிங் செய்து விட்டனர் என்று கூறி விட்டார்.

தற்போது இந்த வழக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. நடந்தது குற்றமா இல்லையா, சரியா, தவறா என்றும் யாருக்கும் புரியவில்லை. நித்தியானந்தாவும் வழக்கம் போல தனது பெங்களூர் மடத்தில் போதனை செய்ய ஆரம்பித்து விட்டார்.

இந்த நிலையில், நித்தியானந்தா கதையை படமாக்கவுள்ளனர் தெலுங்கில். நித்தியானந்தா வேடத்தில் ராஜேந்திர பிரசாத் நடிக்கப் போகிறாராம். இவர் தெலுங்கில் பிரபலமான காமெடி ஹீரோ ஆவார்.

சிவாஜி, சாய்குமார் ஆகியோரும் உள்ளனர். ஹைதராபாத்தில் சமீபத்தில் படத்திற்கு பூஜை போட்டனர். அப்போது நித்தியானந்தா கெட்டப்பில் வந்தாராம் ராஜேந்திர பிரசாத்.

கதை என்னவோ நித்தியானந்தா கதைதான் என்றாலும் அதை இப்போதைக்கு ரகசியமாகவே வைத்துள்ளனராம். கேஸ் ஏதாவது வந்தால் சிக்கலாகி விடுமே என்பதற்காக இந்த அடக்கி வாசிப்பாம்.

ரஞ்சிதா கேரக்டருக்குரிய நடிகையை வலைவீசி தேடும் பணி தற்போது நடந்து வருகிறதாம்.

Thursday, September 2, 2010

Trisha confess | போதையில் பேதை?

ஒரு பரபரப்பை இன்னொரு பரபரப்பால்தான் அடக்க வேண்டும் என யாரோ த்ரிஷாவிடம் சொல்லிவிட்டார்கள் போல.

போதை மருந்து விவகாரத்தில் த்ரிஷாவின் பெயர் ஏகத்துக்கும் ரிப்போராகிக் கொண்டிருக்க, அவரோ கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அடுத்தவர்களுக்கு அட்வைஸ், கருத்து என தொடர்ந்து பரபரப்பைக் கிளப்பி வருகிறார்.

ஏற்கெனவே அசின் இலங்கை போன விவகாரத்தில் கருத்து சொல்லியிருந்த த்ரிஷா, இப்போது மீண்டும் அதுபற்றிப் பேச ஆரம்பித்துள்ளார்.

"அசின் இலங்கைக்குப் போனதே தவறு. இங்கே உள்ள பிரச்சினைகள் தெரிந்தும் அவர் வேண்டுமென்றே போனது போலாகிவிட்டது. 

இப்போதும் சொல்கிறேன்... என்னை அழைத்திருந்தால் நிச்சயம் நான் போயிருக்க மாட்டேன்..." என்று கூறியுள்ளார்.

இன்னொரு பக்கம், கேட்டால் கூட கல்யாணம் பற்றி பதில் சொல்லாமல் தவிர்க்கும் த்ரிஷா, இப்போது தானாகவே முன்வந்து கல்யாண மேட்டரையும் பேசுகிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், "எல்லோரும் என் கல்யாணம் பற்றியே கேட்கிறார்கள் (இதுபற்றி அந்தப் பேட்டியில் கேள்வியே இல்லை!). நான் காதல் திருமணம்தான் செய்து கொள்வேன். நிச்சயம் முன் பின் தெரியாதவரை கல்யாணம் செய்து கொள்ளமாட்டேன்" என்று கூறியுள்ளார்.

இந்த போதை மருந்து விவகாரத்தில் பெயர் கெட்டாலும், த்ரிஷாவுக்கு ஒரு பெரிய லாபமாம்... பாலிவுட்டில் இப்போது அவரைப் பற்றித் தெரியாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறதாம்!

Monday, August 30, 2010

HANSIKA GALLERY | Hansika Child hood photos






Thursday, August 26, 2010

Trisha Exposed in Maxim








thrisha explored in hindi | த்ரிஷா ஹிந்தியில்

மேக்ஸிம் இந்தியா இதழுக்கு கவர்ச்சி கரமாக போஸ் கொடுத்துள்ளார் திரிஷா.

கோலிவுட், டோலிவுட் என சுற்றி வந்த திரிஷா தற்போது தேசிய நடிகையாகி விட்டார். கத்தா மீத்தா மூலம் இந்திக்குப் போனதால் அவரையும் தேசிய அளவிலான கவர்ச்சிக்குள் தள்ளி விட்டார்கள் போல.

போன வேகத்தில் மேக்ஸிம் இந்தியா இதழுக்கு கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்து அமர்க்களப்படுத்தியுள்ளார் திரிஷா.

தமிழ் சினிமா ரசிகர்கள் இதுவரை பார்த்திராத கோணத்தில் விதம் விதமாக போஸ் கொடுத்துள்ளார் திரிஷா.

ஜூலை மாத மேக்ஸிம் இதழில் இந்த கவர்ச்சிகரமான படங்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படங்களைப் பார்க்கும்போது இந்தியில் எந்த அளவுக்கு திரிஷா நடிப்புக்கு
குறி வைத்திருக்கிறார் என்பது லேசு பாசாக புரிகிறது.

மேலும் படங்களுக்கு இதை சொடுக்குக.
http://cinemagilma.blogspot.com/2010/08/trisha-exposed-in-maxim.html

Wednesday, August 18, 2010

hansika... | தட தட , தடவி எடுத்தாங்க?

நடித்து இன்னும் முழுசாக ஒரு படம் கூட வெளிவரவில்லை... ஆனால் அதற்குள் ஹன்சிகாவுக்கு எக்கச்சக்க தமிழ் ரசிகர்களாம். அதன் பலனையும் சமீபத்தில் முழுசாக 'அனுபவித்திருக்கிறார்' ஹன்சிகா மோத்வானி!

சமீபத்தில் வெளியான பீப்ளி இந்திப் படத்தைப் பார்க்க சென்னையில் உள்ள அந்த பிரபல மாலுக்கு சென்றுள்ளார் ஹன்சிகா.

நம்மை யாருக்குத் தெரியப் போகிறது என்ற நினைப்பில் ரொம்ப கேஷுவலாக, அந்த மாலில் நுழைந்து கடைகளைப் பராக்குப் பார்த்தபடியே சென்றுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் திமுதிமுவென்று இளைஞர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டார்களாம்.

என்ன செய்வதென்று யோசிப்பதற்குள், ஆர்வ மிகுதியால் அவரை அங்கே இங்கே தொட்டுத் தடவி படுத்திவிட்டார்களாம். சில ரசிகர்கள் அவர் கையைப் பிடித்திழுத்து தங்களுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்களாம். இன்னும் சிலர் இடுப்பில் கிள்ள, நிலைமை எக்கச்சக்கமாவதை உணர்ந்த ஹன்சிகா தப்பித்தால் போதுமென்று எஸ்கலேட்டருக்கு தாவ, அங்கேயும் விடாமல் துரத்தியுள்ளனர் ரசிகர்கள்.

"நான் நடித்து ஒரு படம் கூட வெளியாகவில்லை. அதற்குள் எனக்கு இவ்ளோ ரசிகர்களா... தமிழ் ரசிகர்கள் அன்பு திக்குமுக்காட வைக்கிறது" என்றார் ஹன்ஸிகா.

'தமிழ் ரசிகர்களுக்கு வேறு வேலைவெடடி ஏது' என்ற உண்மையை இத்தனை சீக்கிரம் புரிந்து கொண்டுவிட்டார் போலிருக்கிறது!

Tuesday, August 17, 2010

கண்கலங்கிய ரஜினி !!!

சென்னை: சென்னை கம்பன் விழாவில், ஈழத் தமிழர் நிலை பற்றிய பேச்சை கேட்டு நடிகர் ரஜினிகாந்த் கண்கலங்கினார்.

கம்பன் கழகம் சார்பில், 36-வது ஆண்டு கம்பன் விழா சென்னை மைலாப்பூரில் உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.

இறுதி நாளன்று, "கம்பன் புலமை, திருவள்ளுவர் வழியில் பெரிதும் வெளிப்படுவது அறத்திலா, பொருளிலா, இன்பத்திலா'' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

விழாவில், கம்பன் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், புதுவை தர்மராஜன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், ஏ.வி.எம்.சரவணன், சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி மோகன், மூத்த வக்கீல் காந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பட்டிமன்றத்தில் இலங்கையைச் சேர்ந்த ஜெயராஜ் பேசியதாவது:

நானும் தமிழன்தான்... ஆனால் அயல்நாட்டுக்காரன். நான் சுதந்திரமானவனா?ஒருவன், மற்றொருவரை சுதந்திரமாக நடமாடவிடும்போதுதான், சுதந்திரமாகப் பேச, செயல்பட விடுவதுதான் உண்மையான சுதந்திரம். அந்த சுதந்திரமில்லாத நாட்டின் குடிமகன் நான். ஆனாலும், என் எல்லையை உணர்ந்து, உங்கள் சுதந்திரத்தை வாழ்த்துகிறேன்.

ஒருவன் கோடிக் கோடியாகச் சம்பாதிக்கலாம், வெற்றி பெறலாம். ஆனால் அறமில்லாத வெற்றி தூக்கத்தைத் தராது.

அறமாக வாழ்ந்தால் சொர்க்கத்துக்கு போகலாம். ஆனால், சொர்க்கத்துக்கு போனவர்கள் யார் யார் என்று யாருக்கு தெரியும்.... காந்தி, அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர். என்று நாமாகச் சொல்லலாம். ஆனால் பார்த்தவர்கள் யார்?" என்றார்.

இந்தப் பேச்சை மேடைக்கு முன்வரிசை இருக்கையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார் ரஜினிகாந்த்.

ஈழத் தமிழரின் சுதந்திரமற்ற நிலை பற்றிய அந்தப் பேச்சைக் கேட்டதும் கண்கலங்கினார் அவர். சிறிது நேரம் மேடையைப் பார்த்துக் கொண்டிருந்தவர் பின்னர் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

Sunday, August 15, 2010

controverse. | இதை என்ன சொல்றீங்க ?

Wednesday, August 11, 2010

ASIN drama | பிசுபிசுத்தது

சினிமாக்காரர்களின் இன உணர்வு, நாட்டுப் பற்று குறித்த பேச்சுக்கள் எல்லாமே வெட்டித்தனமானவை, வெறும் பேச்சுக்கள் என்பதற்கு இதோ ஒரு சிறந்த உதாரணம்...

இலங்கைக்குப் போய் ராஜபக்சேவின் விருந்தாளியாகவும் இலங்கை அரசின் பிஆர்ஓவாகவும் செயல்பட்ட அசின், அத்தோடு நில்லாமல் தனக்கு எதிராக கருத்து கூறிய அனைவரையும் ஒரு அரசியல்வாதி ரேஞ்சுக்கு விமர்சித்தார். கூடவே விஜய், சூர்யா போன்ற ஹீரோக்களை இலங்கை அரசின் சார்பில் இலங்கைக்கு வரவழைக்கவும் முயன்றார்.

இலங்கையில் படப்பிடிப்புக்கு இந்திய நடிகர்கள் யாரும் போகக் கூடாது. அப்படிப் போனால் அவர்களுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என தென்னிந்திய சினிமா கூட்டமைப்பு அறிவித்திருந்தது. ஆனால் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை அசின்.

இவருக்கு நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவி கண்டனம் தெரிவிக்க, தலைவர் சரத்குமாரோ தாங்கு தாங்கென்று தாங்கி ஆதரவு தந்தார். அங்கேயே அசின் எதிர்ப்பு பிசுபிசுத்துப் போனது.

அதுவரை, மீண்டும் சென்னைக்குப் போகவே பயமாக உள்ளது என்று இலங்கை பத்திரிகையாளர்களிடம் கூறிவந்த அசின், இப்போது படு பந்தாவாக மீண்டும் விஜய்யுடன் காவல் காதல் படத்தில் நடிக்க வந்துவிட்டார்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் திங்களன்று இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்தது. எந்த எதிர்ப்போ, பிரச்சினையோ இல்லாமல் ஜம்மென்று மெய்க்காப்பாளர்கள் சூழ வந்த அசினை வரவேற்றனர் படக்குழுவினரும், ஹீரோ விஜய்யும்.

இவருக்கு தமிழக போலீசார் கூடுதல் பாதுகாப்பு வேறு கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில், ரெடி படத்தின் அடுத்த ஷெட்யூலுக்கு இலங்கை போகும்போது கூடவே ஒரு தமிழ் ஹீரோவையும் அழைத்து வருவதாக இலங்கை தமிழர்களுக்கு வாக்களித்துள்ளாராம் அசின்.

அசின் வலையில் மாட்டப் போவது யாரோ!

Wednesday, August 4, 2010

tamil inception | ஏழாம் அறிவு

முருகதாஸ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தில் கமல் மகள் ஸ்ருதி ஹாஸன் முதல்முறையாக தமிழில் நடிக்கிறார்.

இந்தப் படம் முற்றிலும் புதிய கதை என்று கூறப்பட்டாலும், கிறிஸ்டோபர் நோலனின் இன்செப்ஸனின் தழுவல் என்று தெரிய வந்துள்ளது. இதே இயக்குநரின் மொமெண்டோவைத்தான் கஜினியாக எடுத்து வெற்றி கண்டது சூர்யா - முருகதாஸ் கூட்டணி .

இந் நிலையில், படத்தில் சூர்யாவின் பாத்திரம் என்னவென்ற தகவல் வெளியாகியுள்ளது. கதைப்படி சர்க்கஸ் கம்பெனியில் பணியாற்றும் சாகஸக் கலைஞராக நடிக்கிறாராம் சூர்யா. இதற்காக கோவையில் இப்போது நடக்கும் கிரேட் பாம்பே சர்க்கஸ் கூடாரத்தில் ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை தமிழில் காணாத அசத்தல் சாகஸங்களை இந்தப் படத்தில் செய்யவிருக்கிறாராம் சூர்யா.

Friday, July 30, 2010

Ajith in Billa 2 || அஜித்தின் பில்லா (பாகம் இரண்டு )

அஜீத்துக்கு பெரும் ஏற்றத்தைக் கொடுத்த பில்லா படத்தின் 2ம் பாகம் விரைவில் தயாராகவுள்ளதாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த மிகப் பெரிய வெற்றி ப் படங்களில் ஒன்றுதான் பில்லா. இப்படத்தைத்தான் அஜீத்துக்காக அதி நவீனமாக்கி நயனதாரா , நமீதா உள்ளிட்டோர் சகிதம் இயக்கினார் விஷ்ணுவர்த்தன்.

2007ல் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது. அஜீத்துக்கு பெரும் உயர்வையும் கொடுத்தது. நயனதாராவின் ஒல்லிக்குச்சி கவர்ச்சியும், நமீதாவின் அட்டகாச கவர்ச்சியும் இணைந்து பில்லாவுக்குப் புதுமுகம் கொடுத்தது.

சைஸ் ஜீரோவில் வந்து போன நயனதாரா கருப்பு நிற உடையுடன் படம் முழுக்க கலக்கியிருப்பார்.

இப்போது பில்லாவின் 2ம் பாகத்தை எடுக்கப் போகிறார் விஷ்ணுவர்த்தன். இதற்காக அவருடன் மீண்டும் கை கோர்க்கிறார் அஜீத்.

மங்காத்தா படத்தில் நடிக்கவுள்ள அஜீத், அதை முடித்து விட்டு பில்லா-2க்கு வருவாராம்.

அப்படீன்னா நயன், நமீ ரோல்களில் யார் கலக்கப் போவது...?

the robot, எந்திரன் படங்கள்.











நன்றி தினகரன் .

Thursday, July 8, 2010

tapasee தபசி பன்னு , காதல் பண்ணு.








Wednesday, June 30, 2010

நயன்தாரா, விஜய், பிரபு தேவா ????

இதுல்ல விஜய் காமெடி பீசோ?

கெளதம் நெக்ஸ்ட், இப்போ வெங்கட் பெஸ்ட்

கௌதம், அ‌‌‌ஜீத் இணையும் படம் டேக் ஆஃப் ஆகுமா என்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள். மாஸ் ஹீரோவின் படத்தில் இப்படி குழப்பம் ஏற்படும் போது அடுத்ததாக எழும் உடனடி கேள்வி, அடுத்த இயக்குனர் யார்?

இந்தமுறை இந்த கேள்விக்கு கிடைத்திருக்கும் பதில், வெங்கட்பிரபு.

அ‌‌‌ஜீத்தும் வெங்கட்பிரபுவும் நண்பர்கள். ச‌ரியாகச் சொன்னால் அ‌‌‌ஜீத் வெங்கட்பிரபுவின் நலம் விரும்பி. நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று அ‌‌‌ஜீத் வெங்கட்பிரபுவிடம் ஏற்கனவே கூறியிருக்கிறார். ஆனால் அதற்கான காலம் இப்போதுதான் கனிந்திருப்பதாக வெங்கட்பிரபு தரப்பு கூறுகிறது.

தயா‌ரிப்பாளர் சிவாவுக்காக பூச்சாண்டி என்ற படத்தை இயக்க இருக்கிறார் வெங்கட்பிரபு. காலம் தகைந்து வந்தால் பூச்சாண்டியை கிடப்பில் போட்டு அ‌‌‌ஜீத் படத்தை வெங்கட்பிரபு இயக்கலாம் என்கிறார்கள். அ‌‌‌ஜீத்துக்கான ஸ்கி‌ரிப்ட் வேலையில் வெங்கட்பிரபு தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் ஓ‌ரிரு நாளில் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை ரசிகர்கள் அறிந்து கொள்ளலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...