Friday, June 4, 2010

ஐய்யய்யோ.. ஐ.ஐ.எப்.எ நான் போகலை! - அலறும் ஜெனிலியா

நான் ஐஃபா விழாவுக்குப் போனதாக வந்த தகவல் தவறானது. நான் தமிழரையும் தமிழ் உணர்வுகளையும் மதிக்கிறேன். நான் ஒருபோதும் இலங்கை நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன்", என்றார் நடிகை ஜெனிலியா.

இலங்கை தலைநகர் கொழும்பில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடக்கிறது. இதில் தமிழ் சினிமாவின், இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள் யாரும் போகவில்லை. தமிழரின் ரத்தக் கறை படிந்த இலங்கையில், அந்த படுகொலைகளை மறைக்க ராஜபக்சே செய்யும் திருகுதாள வேலை இது என்று தமிழ் உணர்வாளர்கள் எடுத்துச் சொன்னதைக் கேட்டு இவர்கள் அனைவரும் விழாவைப் புறக்கணித்தனர், யாரும் சொல்லும் முன்பே ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் தங்கள் புறக்கணிப்பை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் நேற்று கொழும்பில் தொடங்கிய ஐஃபா விழாவுக்கு சில இரண்டாம் நிலை பாலிவுட் நடிகர்கள் பங்கேற்றனர். இவர்களுடன் நடிகை ஜெனிலியாவும் கலந்து கொண்டதாக சிங்கள பத்திரிகைகள் மற்றும் இணையதளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த செய்தி தமிழ் ஊடகங்களிலும் வெளியானது. இதனால் அவருக்கு தென்னகத்தில் ரெட் கார்டு போடும் நிலை ஏற்பட்டது.

இதைக் கேள்விப்பட்டு ஆடிப்போனார் ஜெனிலியா. "ஐயோ...நான் ஐஃபா விழாவுக்குப் போகவில்லை. உண்மையில் நான் சாயிஃப் அலிகான் மற்றும் ஷாரூக்கானுடன் மேடையில் நடனம் ஆடுவதாக இருந்தது. மனீஷ் மல்ஹோத்ராவுடன் ரேம்ப் வாக் பண்ணவும் ஒப்புக் கொண்டிருந்தேன். ஆனால் தமிழர் போராட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களைப் பார்த்த பிறகு நான் வி்லகிக் கொண்டேன்.

நான் தமிழில் அறிமுகமானவள். தமிழ் சினிமாவை நேசிக்கிறேன். இன்னும் நிறைய படங்கள் பண்ண வேண்டும் ஆசை உள்ளது. இன்னும் இரு தினங்களில் சென்னை வருகிறேன். தனுஷுடன் உத்தம புத்திரன் படத்தில் நடிக்கிறேன்.." என்றார்.

Thursday, June 3, 2010

எதிர்ப்பை மீறி கொலம்போ செல்லும் ஜெனிலியா மற்றும் பிபாஷா, தமிழ் திரை உலகம் மன்னிக்குமா?

கொழும்பில் நடக்கும் ஐஃபா விழாவில் பங்கேற்காமல் ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டார்களே புறக்கணித்து நிற்க, தமிழில் அறிமுகமாகி புகழ்பெற்ற நடிகையொருவர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார்.

அவர் பாய்ஸ் படத்தில் ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெனிலியா டிஸூஸா. சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களிலும் நடித்துள்ளார்.

விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் நாயகிகளில் இவரும் ஒருவர் என்று கூறிவந்தது நினைவிருக்கலாம்.

தமிழில் அறிமுகமானாலும் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில்தான் இவர் நடித்து வருகிறார். கோவாவைச் சேர்ந்த இவர் மராட்டிய முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனை காதலிக்கிறார்.

ஐஃபா விழாவுக்கு ரிதேஷ் தேஷ்முக்கும் சென்றுள்ளார். எனவே காதலர் வழியில் ஜெனிலியாவும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளார். இந்த விழாவுக்குப் போவதன் மூலம் தென்னிந்திய திரையுலகை பகைத்துக் கொள்ள முடியும் என்று தெரிந்தும் அவர் பங்கேற்றுள்ளார்.

ஏற்கெனவே நடிகர் சங்கம் சார்பில் ஈழத் தமிழர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்தபோது, அதில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தவர் ஜெனிலியா. விளக்கம் கேட்டபோது, தான் நடிகர் சங்க உறுப்பினர் அல்ல என்று திமிராகக் கூறி, பின்னர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

பிபாஷா-ஜான் ஆப்ரகாம்:

பாலிவுட்டின் இன்னொரு பிரபல நாயகி பிபாஷா பாஸுவும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளார். இவரது காதலர் ஜான் ஆபிரகாமுடன் இவர் விழாவில் கலந்து கொண்டார். பிபாஷா தமிழில் சச்சின் படத்தில் விஜய்யுடன் குத்தாட்டம் போட்டவர்.

இவர்களைத் தவிர, அனில் கபூர், விவேக் ஓபராய் சல்மான்கான், ஹ்ரித்திக் ரோஷன், லாரா தத்தா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

இன்று ஷில்பா ஷெட்டி விழாவுக்கு வருவார் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...